ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

சனி, 4 செப்டம்பர், 2010

மருதநிலத்து மள்ளர் இசை (பள்ளிசை)

மருதநில உழவர்களாக தேவேந் திர வம்சத்து மள்ளர், குடும்பர், பண்ணாடி ஆகியோரை பள்ளு நூல்கள் காட்டும் கருத்து செம்மையாக இதில் இடம் பெற்றிருக் கிறது. இவருக்கு பள்ளு இலக்கியம் வெகுவாகக் கைகொடுத்திருக்கிறது. மள்ளர் வாழ்வியல் பெருமைகளை அதில் படம் பிடிக்கிறார். விஜயநகர ஆட்சிக்காலம் மள்ளர் மரபினரை ஒடுக்கியது என்றும், அதற்கும் மேல் ஒருபடியாக தெலுங்கர்கள் கட்டுப்பாடற்ற முரட்டுக் கூட்டம் என்று கால்டுவெல் கூறிய தகவல் (பக்கம் 105) படிப்போரைச் சிந்திக்க வைப்பவை. தேவேந்திர குல வேளாளர் உட்பிரிவுகள் அத்தனையும் பட்டியலாக (பக்கம் 289) தரப்பட்டிருக்கிறது. சங்க காலப் பாடல்களுக்கும் பள்ளுப்பாடல்களில் உள்ள முரண்பாடுகள் உட்பட பல புதிய கருத்துக்களும் இந்தநூலில் உண்டு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக