ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வியாழன், 7 மே, 2015

திமுக ஆட்சி காலத்தில் தேவேந்திரர்கள் ....?


1. கீழ வெண்மணி படுகொலை
2. உஞ்சனை படுகொலை
3. தாமிரபரணி படுகொலை 
4. 1992 பரமக்குடி துப்பாக்கி சூடு படுகொலை
5. இ.கோட்டைப்பட்டி சுரேஷ் துப்பாக்கி சூடு படுகொலை
இப்படி எண்ணிலடங்கா படுகொலைகள்…
6. தென்னகத்தின் அனைத்து மாவட்ட தலைமையகங்களிலும் முத்துராமலிங்கத்திற்கு சிலை அடிக்கல் நாட்டியோ திறந்தோ வைத்துக்கொண்டு இருந்த நேரத்தில் பரமக்குடி ஐந்து முனை சந்திப்பில் அய்யா இம்மானுவேல் சேகரனார் சிலை நிறுவவும் அவர் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் நினைவுத்தூண் அமைக்கவும் அனுமதி மறுத்து ஒரு சார்பாக தேவர் சாதி ஆதரவு நிலைப்பாட்டோடு செயல்பட்டது.
7. முத்துராமலிங்கத்தின் பெயரில் அரசு கல்லூரிக்கு அனுமதி அளித்துவிட்டு பரமக்குடி அரசு கல்லூரிக்கு இம்மானுவேல் சேகரனார் பெயர் சூட்ட மறுத்தது.
8. மதுரை பன்னாட்டு விமான நிலையத்திற்கு இமானுவேல் சேகரனார் பெயரை சூட்ட கோரும் நிலம் கொடுத்த தேவேந்திரர்களின் நெடு நாள் கோரிக்கையை உதாசீன படுத்திவிட்டு மதிய அரசிடம் முத்துராமலிங்கம் பெயரை சூட்ட பரிந்துரை செய்தது.
9. இட ஒதுக்கீட்டில் ஒரு சாதிக்கு மட்டும் சிறப்பு உள் இட ஒதுக்கீடு வழங்கி எமது சமூகத்தின் எழுச்சியையும் வளர்ச்சியையும் தடுத்தது.
10. திமுக ஆட்சிக்காலத்தின் போதெல்லாம் இரு சமூகங்களுக்கு இடையே பகையை ஏற்படுத்தி சாதீய மோதலை தூண்டி ஒரு சார்பாக எம் சமூக இளைஞர்களின் மேல் பல பொய் வழக்குகளை போட்டு தேவர் சமூக ஆதரவு நிலைப்பாட்டோடு அரசியல் ஆதாயம் தேடியது…
இப்படி இன்னும் எண்ணிலடங்கா தீமையை திமுக( திருடர் முன்னேற்ற கழகம்) எம் சமூகத்திற்கு பரிசாக வழங்கி இருக்கிறது. உணர்வுள்ள ஒரு தேவேந்திரனால் எப்படி தி.மு.க வை ஆதரிக்க முடியும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக