ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

முதல்வரே 1996 தேர்தலை யோசித்துப்பாருங்க...?

2013 ஆம் ஆண்டு வீரன் சுந்தரலிங்கம் தேவேந்திரனாரின் பிறந்த நாள் விழாவுக்கு முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு எந்த செய்தி தாள்களிலும் விளம்பரம் செய்யாமல் தியாகியின் தியாகத்தை இருட்டடிப்பு செய்தது.
2014 ஆம் ஆண்டு தேர்தலை காரணம் காட்டி எவ்வித விளம்பரமோ அரசு விழாவோ எடுக்கப்படவில்லை.
2014 ஆம் ஆண்டு சென்னை கோட்டையில் கொடியேற்றி 68 வது சுதந்திரதின விழாவில் உரையாற்றிய முதல்வர் ஜெயலலிதா மனித உரிமைப் போராளி தியாகி இம்மானுவேல் சேகரன் படுகொலையின் குற்றவாளியை கூட தியாகி என வரிசைப்படுத்தி பேசுகிறார்.
ஆனால் சுதந்திரப் போராட்டத்தில் வெள்ளையர்களை விரட்ட தன்னுடைய மாமன் மகள் வடிவு-உடன் சேர்ந்து மனித வெடிகுண்டகாமாறி பாஞ்சாலங்குறிச்சி மண்ணில் வெடிகுண்டு கிடங்கை தீயிட்டு கொழுத்தி அத்தீயுடன் தன் உயிரை தியாகம் செய்த வீரன் சுந்தரலிங்கம் பெயரை குறிப்பிடாதது ஏன்?
ஓட்டுக்காக முத்துராமலிங்கத் தேவருக்கு அரசு சார்பில் விழா எடுத்துக் கொண்டாடுகிறார்கள்,13 கிலோ தங்க கவசம் அணிவித்தார்கள்.ஆனால் ஏப்ரல் 16 அன்று வீரன் சுந்தரலிங்கனார் பிறந்த நாள் விழாவை அரசு விழாவாக கொண்டாட மறுத்தார்கள்.
 ஆதிக்கவர்கத்தினர் சுதந்திரத்திற்காகப் போராடினால் தியாகிகள்.
ஆனால் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சார்ந்தவர் சுதந்திரத்திற்காகப் போராடினால் அவர்கள் கௌரவிக்கப்படாமல் அதற்கு மாறாக இருட்டடிப்பு செய்யப்படுகிறார்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக