ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

சனி, 30 ஆகஸ்ட், 2014

முத்துராமலிங்க தேவர் கைதை வரவேற்றார் பெரியார்..


முதுகுளத்தூர் கலவரத்தைத் தொடர்ந்து, முத்துராமலிங்க தேவர் கைது செய்யப்பட்டபோது பெரியார் விடுத்த அறிக்கை:
‘உயர் திருவாளர் பசும்பொன் முத்துராம லிங்கத் தேவரை ஆட்சியாளர் கைது செய்தது பற்றிஒரு சில கும்பல்கள் முதலைக் கண்ணீர் வடிக்கத் தொடங்கியிருக்கின்றன. பார்ப்பனஏடுகளான ‘தினமணி’, ‘கல்கி’ போன்றவைகள் அவரை விடுதலை செய்ய வேண்டுமென்றுகசிந்துருகிக் கண்ணீர் மல்கி எழுதுகின்றன. கலவரப் பிரச்சினையோடு சம்மந்தமில்லாதபல்வேறு சங்கதிகளைக் கலந்து, முதலமைச்சர் மீது தவறான எண்ணங்களைக் கற்பித்துவிஷமத்தனமாக எழுதியிருக்கின்றன.

‘சமாதானக் குழு என்ற பெயரினால் புறப்பட்டிருக்கிற எதிர்க்கட்சிக்காரர்களின் கலவரக்கும்பலும் கோவிந்தா! கோவிந்தா!’ என்று இம்மாதத்தில் சனிக்கிழமைக் காலையில்சிறுவர்கள் வீடு தோறும் சென்று கத்துவதுபோலக் கத்திக் கொண்டிருக்கிறது.

‘திரு. தேவர் அவர்களுக்குக் கட்சியு மில்லை; கொள்கையுமில்லை. ‘சுபாஷ் போஸ்உயிரோடிருக்கிறார்’ என்பது மட்டும் ஒரு கட்சிக்குக் கொள்கையாகிவிடுமா? தேவர் தம்சிறந்த பேச்சுச் சக்தியைப் பயன்படுத்தி, தம் ஜாதிக்காரர்களின் தனிப் பெருந் தலைவராயிருந்துகொண்டு, அதன் மூலம் சட்டசபை அல்லது பார்லிமெண்டில் பதவி பெறுவதுஎன்பதே அவரது பொதுத் தொண்டாயிருந்து வருகிறது. எதிர்க்கட்சிகள் தேர்தலில் வெற்றிப்பெற்று மந்திரிசபை அமைக்க முடிந்தால் அதில் தமக்கொரு மந்திரி கிடைக்குமாஎன்பதற்காக 2, 3 பேர்களைச் சேர்த்துக் கொண்டு தனிக் கட்சியமைப்பவராதலால் அந்தவாய்ப்பு இல்லையென்றவுடனேயே பார்லிமெண்ட் உறுப்பினர் பதவியை வைத்துக் கொண்டு(அதிக ஊதியம் அதில் இருப்பதால்) எம்.எல்.ஏ. பதவியை உதறிவிட்டார். தன்னந் தனியாய்ப்பார்லிமெண்டில் போய் இவர் என்ன சாதிக்கப் போகிறார் என்பதைப் பற்றி அவரைத்தான்கேட்க வேண்டும்.

‘ஜாதி வெறியை வளர்த்து மற்ற ஜாதிகளை ஒடுக்கி வைத்துத் தான் ஒரு தனிக்காட்டு ராஜாமாதிரி இருந்து வந்தால் ஜாதி ஒழிப்புக் காரராகிய நாம் வருந்தாமலிருக்க முடிய வில்லை.ஜாதி வெறி வேரூன்றிவிட்டால் ஜன நாயகத் துக்கோ, பகுத்தறிவுக்கோ, பொதுநலத்தொண்டுக்கோ, ஒழுக்கத்துக்கோ, நீதிக்கோ இடமில்லை.

‘தேவர் சிறைவாசத்தை நாமும் விரும்ப வில்லை என்றாலும், இந்தச் சூழ்நிலையில்அவரைச் சிறைப் பிடிக்காதிருந்தால் சாதிச் சண்டை நின்றிருக்காதென்பது உறுதி. அவர்வெளியிலிருந்த வரை கலவரம் நடந்து கொண் டிருந்ததும், கைது செய்யப்பட்ட பின்கலவரம் அடியோடு ஓய்ந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

‘இன்று அவருக்காக நீலிக் கண்ணீர் வடிக்கின்ற சி.ஆர். (இராஜகோபாலாச்சாரி), கும்பலைச்சேர்ந்தவர்களுக்கு ஒன்று நினைவூட்டுகிறோம். இதே சி.ஆர். அவர்கள்முதலமைச்சராயிருந்தபோதுதான் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் திரு.முத்துராமலிங்கனார்கைது செய்யப்பட்டுப் பல ஆண்டுகள் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

2-வது உலகப் போரின்போது இவர் ஜாதிச் சண்டைக்குக் காரணமாயிருப்பார், போர் எதிர்ப்புப்பிரச்சாரஞ் செய்வார் என்ற காரணத்திற்காகச் சிறைப்படுத்தப்பட்டிருந்தார்.

‘இன்றைய நிலையிலுங்கூட முன்கூட்டியே தேவரைத் தனிப்படுத்தியிருந்தால் இத்தனைஉயிர்கள் பலியாகியிருக்குமா? இவ்வளவு பொருட்சேதம் ஏற்பட்டிருக்குமா? இத்தகையஆதி திராவிடக் குடும்பங்கள் ஊரைவிட்டு வெளியேறி தவிக்குமாறு நேர்ந்திருக்குமா?

‘போலீஸ் நடவடிக்கை சிறிது தாமத மானதால்தான் இவ்வளவு சேதம் ஏற்பட்டது. இன்னும்பல மாதங்களுக்குப் போலீஸ் படை கலவரப் பகுதிகளில் காவல் புரிந்துதான் தீர வேண்டும்.போலீஸ் துப்பாக்கிப் பிரயோகத் தினால் மாண்டவர்களுக்காக முதலைக் கண்ணீர்வடிக்கின்றவர்கள், மாதா கோயிலுக் குள் புகுந்து ஏழை மக்களைச் சாதிவெறியர்கள்பதைக்கப் பதைக்கச் சுட்டுக் கொன்றும், அடித்தும், பெண்களை அவமானப்படுத்தியும்மிருகத்தனமாக நடந்துக் கொண்டதைக் கண்டிக்காமலும் வருந்தாமலும் இருப்பது ஏன்?

‘சமாதானக் குழு என்ற புதுக் கும்பல் இனிப் புதுக் கலகத்துக்கு விதை ஊன்றுவார்களோஎன்று அஞ்ச வேண்டியதிருக்கிறது. இவர்கள் பேச்சும் நடத்தையும்அத்தகையதாயிருக்கிறது. ஆதலால் அவர்களைக் கலவரப் பகுதியில் நுழையவிடக்கூடாதென்று ஆட்சியாளருக்கு எச்சரிக்கின்றோம். குழம்பியுள்ள குட்டையில் மீன் பிடிக்கப்பார்க்கிறார்கள் இக் குழுவினர். இவர்களுக்கு பஸ்ஸூல்லா ரோடுப் பார்ப்பனர் தலைவர்தூபம் போடுகிறார்.”

- பெரியார் - ‘விடுதலை’

முதுகுளத்தூர் கலவரம் குறித்து பெரியார் நடத்திய ‘விடுதலை’ வெளியிட்ட செய்திகள்

இன்று மட்டுமல்ல, முதுகுளத்தூர் கலவர காலம் முதல் ஒடுக்கப்பட்ட மக்களினது போராட்டங்களுக்கு வெளிப்படையான, உறுதியான ஆதரவை எந்தவொரு அரசியல்கட்சியும் தந்ததில்லை. தங்களது வாக்கு வங்கியாக, ஒடுக்கப்பட்ட மக்களைப் பயன்படுத்தும்நோக்கில் மட்டுமே அரசியல் கட்சிகளும், வலதுசாரி - இடதுசாரி தலைவர்களும் பாசாங்குசெய்து வருகின்றனர். விதிவிலக்காக திராவிடர் கழகமும், விடுதலை நாளேடும் மட்டுமேஅன்றைய சூழலில் ஆதரவு தளத்தில் செயல்பட்டன. ‘விசாரணையின் தீர்ப்பு’ என்றதலைப்பில் 12.10.57 அன்றைய ‘விடுதலை’ நாளேடு, ‘திரு. முத்துராமலிங்கத் தேவர் அவர்கள்கைது செய்யப்பட்டதை முன்னிட்டு சென்ற வாரத்தில் மதுரையில் கடையடைப்பு நடந்ததாம்(மதுரையில் கடையடைப்புச் செய்ய வேண்டுமென்று யாராவது ஒருவர் 4 முக்கியஇடங்களில் தட்டியில் எழுதி வைத்துவிட்டால் போதும்! காலித்தனத்துக்கு அஞ்சி எல்லாக்கடைகளையும் மூடிவிடுவார்கள்!) இந்தக் கடையடைப்பை மேற்பார்வையிடுவதற்காககம்யூனிஸ்ட் எம்.பி.யும், கண்ணீர்த் துளித் (தி.மு.க.) தலைவர் ஒருவரும், காங்கிரஸ்கண்ணீர்த் துளி தலைவரும் ஒரே மோட்டார் காரில் ஊர்வலமாகச் சென்றார்கள் என்றுபடித்தோம். எவ்வளவு ஒற்றுமைப் பார்த்தீர்களா? எலியும், பூனையும், நாயும் ஒரே தட்டில்உணவு சாப்பிடுவதைப் போன்ற சர்க்கஸ்! சாதி வெறியர்களுக்கு ஆதரவாக சமாதானக்குழுவாம்! ஊர்வலமாம்! கடையடைப்பாம்! நிதி திரட்டலாம்! நீதிமன்ற வழக்காம்! கீழத்தூவல் கலவரத்தின்போது போலீசார் துப்பாக்கிப் பிரயோகம் செய்திருக்காவிட்டால்இருபுறமும் நூற்றுக்கணக்கான உயிர்கள் சேதப்பட்டிருக்கும்; இன்னும் ஏராளமானஆதிதிராவிடக் குடிசைகள் தீக்கிரையாகியிருக்கும். சாதிவெறி எங்கிருந்தாலும் அதைஅடக்கி, ஒடுக்கியே தீர வேண்டும்’ என தலையங்கம் எழுதியது. தினகரனும் பெரியார்ஒருவரை மட்டுமே ஆதரவு சக்தியாகக் குறிப்பிடுகிறார்.

இராமநாதபுரம் கலவரப் பகுதிகளை மூன்று நாட்கள் பார்வையிட்டு, மதுரையில்பத்திரிகைகளுக்குப் பேட்டியளித்த அன்றைய மத்திய அரசின் உள்துறை அமைச்சர்திரு.பி.என். தத்தார், ‘கடந்த பத்து ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களிடையேவிழிப்பும் எழுச்சியும் ஏற்பட்டு வளர்ந்து வந்திருக்கிறது. சமத்துவ எண்ணமும் தோன்றஆரம்பித்திருக்கிறது. தங்களை தாழ்த்தப்பட்ட மக்களைவிட உயர்ந்தவர்கள் என்று கருதிவந்த மறவர்களுக்கு இது பிடிக்கவில்லை. இவர்கள் நிலப்பிரபுத்துவ கொள்கையைக்கொண்டிருக்கின்றனர் என்றே சொல்ல வேண்டும். உதாரணமாக, மறவர்கள் முன்னிலையில்தாழ்த்தப்பட்ட மக்கள் மேல்துண்டு போடக் கூடாது; காலில் செருப்புப் போட்டுக் கொள்ளக்கூடாது. இப்போக்கை வளரும் தாழ்த்தப்பட்ட இளைஞர் சமுதாயம் எதிர்த்து வந்தது. இம்மனப்பான்மைகளுக்குள் மோதல் ஏற்பட்டதே இக்கலவரத்திற்கு மூலகாரணம். மேற்படிகலவரத்திற்கு உடனடிக் காரணம், இதர சமூகத்தினருடன் சம அந்தஸ்து கோரியதாழ்த்தப்பட்ட மக்களின் தலைவரான திரு. இம்மானுவேல் சேகரன் என்பவர் கொலைசெய்யப்பட்டதுதான்’ என்றார். 

(விடுதலை) 8.10.57)
‘தினகரன் எழுதிய முதுகுளத்தூர் கலவரம் நூலிலிருந்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக