ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

புதிய தமிழகம் இணையதள நண்பர்கள் குழு கூட்டம்..

திருச்சி, : திருச்சியில் மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட புதிய தமிழகம் கட்சி ஆலோசனை கூட்டம் நடந்தது. கார்த்திக் மல்லர் தலைமை வகித்தார். சிவக்குமார், புதிய தமிழகம் வினித் முன்னிலை வகித்தனர். தமிழ்வேந்தன் வரவேற்றார். கூட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் வே.க.அய்யர், மாநில துணை அமைப்பு செயலாளர்கள் பலராமன், துறைமுகம் கண்ணன், தொண்டரணி செயலாளர் லட்சுமண பாண்டியன், திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் அய்யப்பன், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வக்கீல் சங்கர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். 
புதிய தமிழகம் இணையதள நண்பர்கள் குழு துவங்க அனுமதி அளித்த நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு நன்றி தெரிவிப்பது. தமிழகத்தில் மாற்று அரசியலை முன்வைத்து புதிய தமிழகம் இணையதள நண்பர்கள் தொடர் பிரசாரம் செய்வது. இணையதள குழு நண்பர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பது. புதிய தமிழகம் கட்சியின் கொள்கைகள், செயல் திட்டங்கள், சாதனைகள், டாக்டர் கிருஷ்ணசாமியின் சட்டமன்ற உரைகள், அறிக்கைகள், பேட்டிகளை மக்களிடம் எடுத்து செல்வது. கிராமங்கள் தோறும் மக்கள் பிரச்னைகளை கண்டறிந்து போராடுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் வினோத் மிஸ்ரா, கப்பிகுளம் பிராபகர், பாபு, ஜான் கிறிஸ்டோபர், நெல்லை ராமகிருஷ்ணன், பிரகாஷ், பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இசக்கிபாண்டி துவாரகா நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக