ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

சனி, 23 ஆகஸ்ட், 2014

தேவேந்திர குல வேளாளர் வரலாற்று பெருமைகளை விலக்கும் பழனி செப்பேட்டின் நகல்.

மதுரை அருங்காட்சியகத்தில் தேவேந்திர தன்னார்வ அறக்கட்டளை நிறுவுனர் திரு .ம.தங்கராஜ் அவர்கள் முலம் ஒப்படைப்பு.
அரசு அருங்காட்சியகம் மதுரையில் படியெடுக்கப்பட்ட பழனி செப்பேட்டின் பிரதியை பாதுகாத்து வைக்கவில்லை என்ற செய்தி தமிழ். இந்து நாளிதழ் மூலம் தெரியவந்தது.பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருத்துறைப்பூண்டியில் வசிக்கும் திரு.சுந்தர் என்பவரின் இல்லத்தில் பழனி செப்பேட்டின் நகல் பார்த்த நினைவிற்கு வந்தது இது பற்றி அவரிடம் தொலைபேசியில் பேசி செப்புப்பட்டய நகல் இருப்பதை உறுதி செய்த பிறகு திருத்துறைப்பூண்டி சென்று நகலை பெற்று அரசு அருங்காட்சியக காப்பாட்சியரிடம் 18.8.2014 அன்று தமிழ் இந்து நாளிதழ் திரு.மகேஷ் நிருபர் அவர்கள் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது.மேற்கண்ட நகலை அருங்காட்சியக நூலகத்தில் முறைப்படி காப்பாட்சியரால் பதிவு செய்யப்பட்டு நூலகத்தில் பொது பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.செப்புப்பட்டய நகலை பார்க்க,படிக்க விரும்புவர்கள்.
நூலகம்
அரசு அருங்காட்சியகம்
காந்தி மியூசியம்
மதுரை -20
என்ற முகவரியில் தொடர்பு கொண்டு பார்வையிடலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக