ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

இலங்கை தூதரகம் தாக்கப்பட்ட வழக்கு: டெல்லி நீதிமன்றத்தில் கிருஷ்ணசாமி ஆஜர்..

புதுடெல்லி: இலங்கை தூதரகம் தாக்கப்பட்ட வழக்கில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தி்ல் இன்று ஆஜரானார்.

அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபக்சேவை கண்டித்து கடந்த 2009ஆம் ஆண்டு புதிய தமிழகம் கட்சி சார்பில் டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, இலங்கை தூதரகம் தாக்கப்பட்டது. இது தொடர்பாக கிருஷ்ணசாமி உள்பட 11 பேர் மீது டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் கிருஷ்ணசாமி உள்பட 11 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, வழக்கில் ஆஜராகாததால் கிருஷ்ணசாமிக்கு டெல்லி நீதிமன்றம் பிடிவராண்ட் பிறப்பித்தது. இந்நிலையில், டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் கிருஷ்ணசாமி இன்று ஆஜரானார்.

இதையடுத்து, வழக்கு விசாரணையை செப்டம்பர் 18ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக