ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 13 ஆகஸ்ட், 2014

மீனவர் பிரச்னை குறித்து பேச அனுமதி மறுப்பு..

சென்னை: பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, அஸ்லாம்பாஷா ஆகியோர் எழுந்து, தமிழக மீனவர்கள் பிரச்னை பற்றிய கவன ஈர்ப்பு தீர்மானத்தை எடுத்து கொள்ள அனுமதி கேட்டனர். இதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டார். இதனால் அந்த கட்சி உறுப்பினர்கள் 2 பேரும் வெளிநடப்பு செய்தனர். இதைத்தொடர்ந்து புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியும் வெளிநடப்பு செய்தார்.
பின்னர் பேரவைக்கு வெளியே ஜவாஹிருல்லா அளித்த பேட்டி  தமிழகத்தை சேர்ந்த 93 மீனவர்களும் அவர்களின் 63 விசை படகுகளும் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளன. இவர்களை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேச அனுமதிக்கவில்லை.

இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையதளத்தில் முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு கடிதம் எழுதுவது பற்றி தரக்குறைவாக விமர்சித்து கட்டுரை வந்துள்ளது. இந்த பிரச்னை பற்றி பேசுவதற்கும் சபாநாயகர் அனுமதி தராததால் வெளிநடப்பு செய்தோம். கிருஷ்ணசாமி (பு.த.): தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது பற்றி அவையில் பேசுவதற்கு அனுமதி தர சபாநாயகர் மறுத்துவிட்டார் ஆயிரக்கணக்கான மீனவர்கள் பிரச்னைகள் 
பற்றி பேசுவதற்கு அனுமதி கொடுக்காததால் வெளிநடப்பு செய்தேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக