ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 13 ஆகஸ்ட், 2014

சட்டப்பேரவையில் இருந்து புதிய தமிழகம் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு



சட்டப்பேரவையில் இருந்து புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி வெளிநடப்பு


இலங்கையில் நடைபெறும் கருத்தரங்கில் இந்தியா கலந்துகொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டப்பேரவையில் இருந்து புதிய தமிழகம் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேச முயன்றார். இலங்கையில் நடைபெறும் ராணுவ கருத்தரங்கில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஆனால் அந்த கோரிக்கையை ஏற்க மறுத்த சபாநாயகர், தொடர்ந்து பேசுவதற்கு அவருக்கு அனுமதி மறுத்தார். இதனை கண்டித்து டாக்டர் கிருஷ்ணசாமி வெளிநடப்பு செய்தார். 

மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர் ஜவாஹிருல்லா, போர்க் குற்றங்கள் குறித்து விசாரிக்க இந்தியாவுக்கு வரக்கூடிய சர்வதேச விசாரணைக்குழுவுக்கு விசா மறுக்கப்பட்டிருக்கிறது. இதைப்பற்றி கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று, கண்டனம் தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இவற்றை கண்டித்து மனித நேய மக்கள் கட்சி வெளிநடப்பு செய்திருக்கிறது என்றார். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக