ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

பேரவையில் இருந்து கிருஷ்ணசாமி வெளிநடப்பு..


சட்டப்பேரவையில் செவ்வாய்க் கிழமை கேள்வி நேரம் முடிந்ததும், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எழுந்து, தான் கொடுத்திருந்த கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் குறித்து கேட்டார்.
அதற்கு பதிலளித்த பேரவைத் தலைவர் ப.தனபால், ‘‘கவன ஈர்ப்புத் தீர்மானம் குறித்து சம்பந்தப்பட்ட துறையில் இருந்து பதில் வந்ததும், ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டிருக்கிறேன்’’ என்றார்.
ஆனால், கிருஷ்ணசாமி உட்காராமல் தொடர்ந்து ஏதோ பேசிக் கொண்டே இருந்தார். அப்போது மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசுமாறு தேமுதிக உறுப்பினர் தினகரனை பேரவைத் தலைவர் அழைத்தார். இதையடுத்து கிருஷ்ணசாமி அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
அவைக்கு வெளியே நிருபர்களிடம் அவர் கூறும்போது, ‘‘இந்தக் கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்து 50-க்கும் அதிகமான முக்கிய பிரச்சினைகள் குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானங்களை கொடுத்திருந்தேன்.
அதில் ஒன்றைக்கூட விவாதத் துக்கு எடுத்துக் கொள்ளவில்லை. இலங்கை ராணுவம் நடத்தும் கருத்தரங்கில் பாஜக தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
திருநெல்வேலி கோபால சமுத்திரத்தில் இரு பிரிவினர் இடையே மோதல் நடந்து வருகிறது. இதுபற்றி எல்லாம் பேச வேண்டும் என்றால் அதற்கு அனுமதி கிடைப்பதில்லை. இதைக் கண்டித்து வெளிநடப்பு செய்தேன்’’ என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக