ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

சனி, 2 ஆகஸ்ட், 2014

தமிழக முதல்வரிடம் இலங்கை அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்...ஜான் பாண்டியன்

ஏழு கோடி தமிழர்களின் இதயமாக செயல்படும் தமிழக முதல்வர் குறித்து இலங்கை பாதுகாப்பு அமைச்சக இனணயதளத்தில் தரக்குறைவான வார்த்தைகளில் செய்தி வெளியிட அனுமதித்த தரங்கெட்ட இலங்கை அரசின் திமிரை தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது...
தமிழக மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண மத்திய அரசை வலியுறுத்தி மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் துரித கடிதம் அனுப்புவதை காதல் கடிதம் என்று கொச்சைப்படுத்தியும் தமிழக முதல்வரின் சண்டித்தனம் என்று கேவலப்படுத்தியும் மோடி மந்திரம் என்ற வார்த்தையின் மூலம் பாரத பிரதமரை அவமதித்தும் செய்தி வெளியிட அனுமதித்த இலங்கை அரசின் திமிரை அடக்க கட்சத்தீவை இந்திய அரசு மீட்க வேண்டும் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் மத்திய அரசை வலியுறுத்துகிறது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக