ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வியாழன், 16 பிப்ரவரி, 2012

தேவேந்திர குல மக்கள் - முஸ்லிம்களுக்கு இடையே பிளவு ஏற்படுத்த சதி: ஜான்பாண்டியன் குற்றச்சாட்டு!

சங்கரன்கோவில் கலவரத்திற்கு காரணமான தென்மண்டல ஐ.ஜி.யை மாற்ற வேண்டும் என்று தமமுக தலைவர் ஜான் பாண்டியன் வலியுறுத்தியுள்ளார். சங்கரன்கோவிலில் ஏற்பட்ட கலவரத்தில் காயமடைந்த காளிராஜ், பெருமாள் ஆகியோர் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அவர்களை தமமுக தலைவர் ஜான்பாண்டியன் சந்தித்து ஆறுதல் கூறினார். மாநகர செயலாளர் கண்மணி மாவீரன் மற்றும் நிர்வாகிகள் உடன் சென்றனர்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது, காவல்துறை பாதுகாப்பு கொடுத்தும் இந்த தாக்குதல் நடந்துள்ளது. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து அங்கிருந்த போலீஸ் அதிகாரிகளுக்கு தெரியும். உடனே உயர் திகாரிகளுக்கு தகவல் தெரிவித்திருந்தால் கலவரத்தை தடுத்து நிறுத்தியிருக்க முடியும். ஒரு சிலரின் சதியால் இந்த கலவரம் நடந்துள்ளது. அரசு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்கெல்லாம் தென்மண்டல் ஐ.ஜி. ராமதாஸ் தான் காரணம். பரமக்குடி துப்பாக்கிச்சூடு முதல் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் போலீஸ் தடியடி நடத்தியது வரை இதற்கு எடுத்துக்காட்டு ஆகும். எனவே அவரை உடனடியாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக