ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடாது- ஜான்பாண்டியன் அறிவிப்பு


  
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடாது- ஜான்பாண்டியன் அறிவிப்பு
நெல்லை, பிப். 28-
சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடாது என அக்கட்சி தலைவர் ஜான்பாண்டியன் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;-
 
சங்கரன்கோவில் தொகுதியில், தமிழக மக்கள் முன்னேற்ற கழக செயல்வீரர்கள் கூட்டம் கடந்த 25-ந் தேதி நடந்தது. கூட்டத்தில் தேர்தலில் போட்டியிடுவது பற்றி கட்சி நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. அதன் பிறகு அரசியல் உயர்மட்ட குழு தேர்தல் பணிக்குழு கூட்டம் நடைபெற்றது. செயல்வீரர்கள் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் முடிவு எடுக்கப்பட்டது. 
 
சங்கரன்கோவிலில் தொகுதி இடைத்தேர்தலில் ஜனநாயகம் காப்பாற்றப் படாது. கடந்த காலங்களில் நடந்த இடைத்தேர்தல்களில் ஜனநாயகம் எப்படி கேலி கூத்தானது என்பது அனைவருக்கும் தெரியும். எனவே, சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது இல்லை என முடிவு செய்யப்பட்டு உள்ளது. தேர்தலை சந்தித்து, காலத்தை வீணாக்குவதை விட கட்சியின் உட்கட்டமைப்பை வலுப்படுத்துவது என முடிவு செய்யப்பட்டு உள்ளது.
 
எனவே தமிழக மக்கள் முன்னேற்ற கழக பொறுப்பாளர்கள், தொண்டர்கள் எந்த வேட்பாளர்கள் மக்களுக்கு நல்லது செய்வார்கள் என எண்ணிப் பார்த்து வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக