ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012

சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: அதிமுக கூட்டணியிலுள்ள புதிய தமிழகம் முடிவு!

நடைபெற இருக்கும் சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து, தொகுதி மக்களின் கருத்து கேட்டு முடிவு எடுக்கப்படும் என அதிமுக கூட்டணியிலுள்ள புதிய தமிழகம் கட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

"2011- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் புதிய தமிழகம் கட்சி உட்பட ஒன்பது கட்சிகள் அ.இ.அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்தன. உள்ளாட்சி மன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க தனித்துப் போட்டியிட்ட நிலையில் கூட்டணியில் இடம்பெற்ற மற்ற கட்சிகளும் அதே நிலைபாட்டை எடுத்தன.

சங்கரன்கோவில் சட்டமன்ற இடைத்தேர்தலிலும் ஆளும் அ.இ.அதி.மு.க முன்கூட்டியே தனது கட்சியின் வேட்பாளரை அறிவித்து தேர்தல் பணிகளை துவங்கியுள்ள நிலையில் கூட்டணியில் அங்கம் பெற்ற மற்ற கட்சிகளும் தங்களது நிலைபாடு குறித்து முடிவெடுக்க ஆலோசனை நட்த்தி வருகிறார்கள்.

தென்காசி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் புதிய தமிழகம் கட்சிக்கு வலுவான வாக்கு வங்கி உள்ளது. இத்தேர்தலில் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றும் பொருட்டு வருகிற 23,24 ஆகிய தேதிகளில் தொகுதிக்கு உட்பட்ட மூன்று ஒன்றியங்களில் உள்ள கிராம்ம் தோறும் சென்று புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொகுதி மக்களின் கருத்தறிய உள்ளேன். அதன்பின் முடிவு அறிவிக்கப்படும்."

மேற்கண்டவாறு டாக்டர் க.கிருஷ்ணசாமி அறிக்கையில் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக