ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

திங்கள், 20 பிப்ரவரி, 2012

அதிமுகவுடன் கூட்டணி சேர ஜான்பாண்டியன் நிபந்தனை!





சங்கரன்கோவில் இடைத்தேர்தல் மார்ச் 18ம் தேதி நடைபெறுகிறது.  இந்நிலையில் தமிழக மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் ஜான்பாண்டியன் சங்கரன்கோவிலில்  செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர்,  ’’அதிமுகவை எதிர்ப்பதற்கு பொது வேட்பாளரை நிறுத்தவும் நாங்கள் தயார்.  இதற்காக எதிர்க்கட்சிகள் பேசுவதற்கு அழைத்தால் நாங்கள் ஏற்றுக்கொள்வோம்.  

புதிய தமிழகம் எங்கள் கட்சியின் ஆதரவை கேட்டால் அவர்களோடு நாங்கள் இணைந்து செயலாற்றுவோம்.   எங்களோடு
திராவிட கட்சிகள் பேசுவதற்கு அழைப்பு விடுத்தாலும் அவர்களோடு நாங்கள் ஒத்துழைப்பு தர தயாராக இருக்கிறோம்.   குறிப்பாக அதிமுக எங்கள் கட்சியின் ஆதரவை கேட்டாலும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.


அதற்காக பரமக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு காரணமான ஐபிஎஸ் அதிகாரிகளை பணி நீக்கம் செய்துவிட்டு அவர்கள் மீது 302 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு  என்பது உள்ளிட்ட ஐந்து கோரிக்கைகள் உள்ளன.
இந்த கோரிக்கைகளை அவர்கள் ஏற்றுக்கொண்டால் நாங்கள் கூட்டணி பேசுவதற்கு தயார். 

மேலும் எங்கள் கட்சியின் சார்பில்
வேட்பாளரை நிறுத்த உள்ளோம்.   இவை அனைத்தும் வருகின்ற 25ம் தேதி எங்களின் பொதுக்குழுவில் விவாதித்து முடிவெடுப்போம்’’ என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக