ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

சனி, 25 பிப்ரவரி, 2012

ஜான்பாண்டியன் திமுகவுக்கு ஆதரவு?








தமிழக மக்கள் முன்னேற்றக்கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன் இன்று சங்கரன்கோவிலில் தனது கட்சி தொண்டர்கள் மற்றும் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக சங்கரன் கோவிலுக்கு வந்தார்.


நகரின் வைஸ்ணவி மகாலில் திரளாக கலந்துகொண்ட தனது கட்சியினரிடம் இடைத்தேர்தலில் தமிழக மக்கள் முன்னேற்றக்கழகம் தனித்துப் போட்டியிடவேண்டுமா? வேறு கட்சிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டுமா? என்று கேட்டு பதிலை துண்டு சீட்டில் எழுதித்தருமாறு கேட்டார்.

இதையடுத்து தொண்டர்கள் தங்கள் கருத்துக்களை எழுதிக்கொடுத்தனர்.  ரகசிய கருத்து கேட்பு முடிவின்படி
தனித்துப்போட்டியிடுவதா?

அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடுவதா என்று முடிவெடுத்து அறிவிக்கும் அதிகாரம்
கட்சியின் நிறுவனர் ஜான்பாண்டியனுக்கு வழங்கப்பட்டிருந்தது.

இதனை அடுத்து பேசிய ஜான்பாண்டியன்,   ‘’நீங்கள் என்னிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டீர்கள்.   நீங்கள்
எதிர்ப்பார்க்கும் வகையில் நல்ல முடிவினை மேற்கொள்வேன்’’ என்றார்.

ஆனால், கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களோ திமுகவிற்கே ஆதரவு கொடுப்பதற்கே வாய்ப்புகள் இருக்கலாம் என்று
சூசகமாக தெரிவித்தனர்.














கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக