ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வியாழன், 9 பிப்ரவரி, 2012

சங்கரன் கோவிலில் சமாதான கூட்டம் இருதரப்பினரும் புறக்கணிப்பு


சங்கரன்கோவில்:சங்கரன்கோவிலில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட கலவரம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் விடுக்கப்பட்ட சமாதான கூட்டத்தை இரு பிரிவினரும் புறக்கணித்தனர்.சங்கரன்கோவிலில் நேற்று முன்தினம் முளைப்பாரி ஊர்வலம் செல்லும் போது இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக மாறியது. இதில் ஏராளமானவாகனங்கள் தீ வைத்தும், அடித்தும் நொறுக்கப்பட்டது. இரு பிரிவைச் சேர்ந்த 17 பேர் காயமடைந்தனர். 

இதனால் கலவரம் நடந்த இடம் போர்க்களம் போல் காட்சி அளித்தது. சம்பவ இடத்தை தென் மண்டல ஐ.ஜி., ராஜேஸ்தாஸ், நெல்லை கலெக்டர் செல்வராஜ், டி.ஐ.ஜி., வரதராஜூ, ஆர்.டி.ஓ., இளங்கோ ஆகியோர் பார்வையிட்டனர். இந்நிலையில் இரு பிரிவினருக்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்தும் நோக்கில் நேற்று காலை மாவட்ட நிர்வாகம் சார்பில் சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. பேச்சுவார்த்தைக்காக ஆர்.டி.ஓ., இளங்கோ, தாசில்தார் தாமோதரன் ஆகியோர் தயாராக இருந்தனர். ஆனால் நேற்றும் இரு பிரிவினரிடையேயும் கொந்தளிப்பான நிலை இருந்தது. இதனால் இருபிரிவினரும் சமாதான பேச்சுவார்த்தையை புறக்கணித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக