ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

சனி, 25 பிப்ரவரி, 2012

புதிய தமிழகம் விரும்பினால் ஆதரவு ஜான்பாண்டியன் பேட்டி

சங்கரன்கோவில் இடைத்தேர்தல்


நெல்லை: சங்கரன்கோவிலில் தமமுக தலைவர் ஜான்பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது: சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் புதிய தமிழகம் கட்சி ஆதரவு கேட்டால், நாங்கள் கொடுக்க தயாராக இருக்கிறோம். இதுவரையில் எந்த கட்சியினரும் தேர்தல் கூட்டணி குறித்து பேசவில்லை. எங்களின் கோரிக்கைகளை ஏற்பவர்களுடன் தான் கூட்டணி வைப்போம். பிப்.25ம் தேதி சங்கரன்கோவில் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் நடக்கிறது. அதில் எங்கள் நிலைப்பாடு குறித்து முடிவு செய்யப்படும்.
 கூட்டணி குறித்து அதிமுக பேசினால், ஆடித்தபசு விழாவில் எங்கள் சமூகத்தினருக்கு மண்டகப்படி, தியாகி இமானுவேல்சேகரனுக்கு அரசு விழா, பரமக்குடி துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது  வழக்குப்பதிவு ஆகிய கோரிக்கைகளை முன்வைப்போம். பரமக்குடியில் பலியான குடும்பங்களை பார்க்க முடியாதவாறு எனக்கு பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
இதை கண்டித்து இன்று அனைத்து மாவட்ட தலைநகரிலும் தமமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். போட்டியின்போது  மாநில அமைப்பு செயலாளர் நெல்லையப்பன், மாவட்ட செயலாளர்கள் ஜெயக்குமார், இன்பராஜ், கண்மணிமாவீரன், மாவட்ட இணைச் செயலாளர் செல்வராஜ்,  இளைஞரணி செயலாளர் பொன்ராஜ், மாணவரணி செயலாளர் அருண் உட்பட பலர் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக