ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012

சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் நான்கு முனைப் போட்டி?

சங்கரன்கோவில் இடைத் தேர்தல், மார்ச் 18ம் தேதி நடைபெறும் என தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இடைத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் துவங்கிவிட்டது.

அ.தி.மு.க., கடந்த இரு மாதங்களாகவே தேர்தல் வேலைகளைத் துவங்கிவிட்டது. இம்முறை, முத்துசெல்வி என்ற பெண் வேட்பாளரை அறிவித்து அசுர வேகத்தில் வேலைகளைச் செய்து வருகிறதுதேர்தல் தேதி அறிவித்ததும், பணிகளைத் துவங்குவோம் என அறிவித்திருந்த தி.மு.க., நேற்று முன் தினம் வாக்காளர் நேர்காணலை நடத்தி, சங்கரன்கோவில் நகர வழக்கறிஞர் பிரிவின் துணைச் செயலர் ஜவகர் சூரியகுமாரை வேட்பாளராக அறிவித்துள்ளது. தேர்தல் பணிகளுக்காக தனிக் குழுவையும் தி.மு.க., அமைக்கிறது. பிரசாரத்தில் கட்சியின் பொருளாளர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் அழகிரி ஆகியோர் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளனர்.

ம.தி.மு.க., வேட்பாளர் இன்று அறிவிப்பு:அ.தி.மு.க.,வைப் போல தேர்தல் வேலைகளை ம.தி.மு.க.,வும் முன்பே தொடங்கி விட்டது. சங்கரன்கோவிலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளவர்களிடம் ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ இன்று நேர்காணல் நடத்தினார். இதையொட்டி நடைபெறும் ஆட்சி மன்ற குழுக் கூட்டத்தில் வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டார். இந்த கூட்டத்தில் சங்கரன்கோவிலில் ம.தி.மு.க., வேட்பாளராக சதன் திருமலைக்குமார் போட்டியிடுவார் என வைகோ அறிவித்தார்.கடந்த பொதுத் தேர்தலைப் புறக்கணித்த நிலையில், ம.தி.மு.க., சங்கரன்கோவிலில் போட்டியிடுகிறது. உள்ளாட்சித் தேர்தலில் கிடைத்த வெற்றி மூலம், உற்சாகத்துடன் களம் இறங்கியுள்ளது. வைகோவின் சொந்த தொகுதி என்பதால், கட்சி நிர்வாகிகள் அனைவரும் தேர்தல் வேலைகளை கவனிக்க அறிவுறுத்தப்பட்டு ள்ளனர்.

21ல் முடிவு செய்கிறது தே.மு.தி.க.,: தே.மு.தி.க., கட்சியின் பொதுக்குழுவை, வரும் 21ம் தேதி விஜயகாந்த் கூட்டியுள்ளார். இதில், சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் தே.மு.தி.க.,வின் நிலையை அவர் அறிவிப்பார் என கூறப்படுகிறது.

கடந்த பொதுத் தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் புதிய தமிழகம் இருந்தது. உள்ளாட்சித் தேர்தலில், அ.தி.மு.க., தனித்துப் போட்டியிட்டதைத் தொடர்ந்து, திருச்சி இடைத் தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவில்லை என புதிய தமிழகம் அறிவித்தது. இப்போதும், அதே நிலை எடுக்கலாமா, வேண்டாமா என்பதை முடிவு செய்ய, மக்கள் கருத்தை அறிய புதிய தமிழகம் முடிவு செய்துள்ளது. இதற்காக, வரும் 23,24ம் தேதிகளில் சங்கரன்கோவில் தொகுதியில் மக்கள் கருத்தறிய உள்ளதாக அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.

அ.தி.மு.க., கூட்டணியில் பிரதான கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சிகள் மவுனமாக உள்ளனர். கட்சியின் மாநிலக் குழுக்களைக் கூட்டி, தங்களின் முடிவை விரைவில் அறிவிப்போம் என, அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.அ.தி.மு.க., தி.மு.க., ம.தி.மு.க., ஆகியன களம் இறங்கிவிட்டன. இதனால் மும்முனைப் போட்டி உறுதியாகிவிட்டது. தே.மு.தி.க., போட்டியிடும் பட்சத்தில் சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் நான்கு முனைப் போட்டி உருவாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக