ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

ஞாயிறு, 23 ஜூன், 2013

மறவர்,கள்ளர் வாழ்வு முறை பற்றி 'கா.அப்பாதுரை'



"மறவர்கள் திண்ணிய உடலும், ஆற்றல் மிக்க உறுப்பமைவுகளும் உடையவர்கள். புலி போன்ற அச்சந்தரும் காட்சியுடையவர்கள். அவர்கள் தலைமயிர் நீண்டு,சுருண்டு அடர்ந்திருந்தது. தோல் பொதிந்தியப்பட்ட விற்கள் தாங்கி குருதி வெறி கொண்டவர்களாய், எந்த சமயத்திலும் பிறரைத் தாக்கத் தயங்காதவர்கள் அவர்கள். துணையற்ற 
ஏழை வழிப்போக்கர் மீது அவர்கள் தம் அம்புகளைச் செலுத்துவர். அவர்களக் கொள்ளையிடுவதால் கிடைக்கப் போவது ஒன்றுமிருக்க முடியாது என்று தெரிந்த சமயத்திலும்,அம்புத் தாக்குண்டவர்களின் உடல் துடிப்பைக் காணும் கொடிய அவாவால் அவர்களைத் தாக்கும் பண்புடையவர்கள் அவர்கள். அவர்கள் தொகை மிகப் பெரியதாயிருந்தது. சிறப்பாக, கீழ்கடற்கரையில்  காவிரி,வைகையாறுகளுக்கிடையே இன்றிருப்பது போலவே அன்றும் அவர்கள் பெருந்திரலாயிருன்தனர். ஆகவே தமிழரசர்களின் படைகளை அவர்கள் வெற்றிகரமாக எதிர்த்து நின்றனர்"

கா.அப்பாதுரை
ஆயிரத்தெண்ணூறு (1800 ) ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம், பக்.80 -81

====================================
நமது துணைக் கேள்விகள்:
-----------------------------------------------------
* தமிழர்களுக்கும், தமிழரசர்களுக்கும் மறவர்கள் பகைவர்கள் என்றால் தமிழரசர்களும், அவர்தம் மரபினரும் யார்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக