ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வியாழன், 26 ஆகஸ்ட், 2010

அ.இ.அ.தி.மு.க கூட்டணியில் புதிய தமிழகம்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் அவர்களை, அவர்களது இல்லத்தில் நேற்று திங்கட் கிழமை, புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி அவர்கள் நேரில் சந்தித்துப் பேசினார். சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடைபெற்ற இச் சந்திப்பின் போது, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் டாக்டர் அருணா, அமைப்புச் செயலாளர் திரு. வி.கே. அய்யர், மாணவர் அணிச் செயலாளர் திரு. பாஸ்கர் மதுரம், விருதுநகர் மாவட்டச் செயலாளர் திரு. ராமராஜ், திருநெல்வேலி மாவட்டச் செயலாளர் திரு. வி. சுப்பிரமணியம் மற்றும் திருச்சி மாவட்டச் செயலாளர் திரு. ஐயப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக