ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 19 அக்டோபர், 2011

பரமகுடி: துப்பாக்கியால் கொல்லும் (தேவர்) அரசு

திமுக ஒரு பார்ப்பன எதிர்ப்பு கட்சியாக இல்லாதபோதும், குறிப்பாக கடந்த ஆட்சியில், பார்ப்பனர்களோடு இணக்கமாக, ஜெயேந்திரன் வழக்கை கிடப்பில்போட்டதும், அதைவிட மோசமாக எஸ்.வி. சேகரை எம்.ஆர்.ராதாவோடு ஒப்பிட்டதுமான சம்பவங்கள் நடந்தபோதும்கூட பார்ப்பனர்கள் திமுகவை தனக்கு எதிரான கட்சியாகவும், அதிமுகவை தங்களுக்கான கட்சியாகவுமே அரசியல் நடத்துகிறார்கள்.
ஜெயலலிதாவின் தலைமைக்குப் பிறகு, பார்ப்பனர்கள் அதிமுகவை தங்கள் கட்சியாகவே கருதுவதைப்போல், சமீபமாக அதிமுகவில் சசிகலாவின் செல்வாக்கிற்குப் பிறகு தேவர் ஜாதி உணர்வாளர்களும் அது தமிழ்த்தேசியம், பெரியாரியம் பேசுகிறவர்கள்கூட அதிமுகவைதான் தங்கள் ஜாதி கட்சியாக உணர்கிறார்கள்.

இத்தனைக்கும் முத்துராமலிங்கம் நூற்றாண்டு விழாவை, கம்யுனிஸ்ட் கட்சிகளின் துணையோடு ஆர்ப்பாட்டமாக, திமுக அரசு கொண்டாடியபோதும், அதிமுகவில் சசிகலா குடும்பத்தின் செல்வாக்கின் காரணமாக தேவர் ஜாதி உணர்வாளர்கள் அதிமுகவைத்தான் கொண்டாடுகிறார்கள்.

இந்த சூழலோடு பொருத்திதான், தியாகி இமானுவேல் சேகரன் நினைவுநாள் நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கிச்சூட்டை பார்க்க வேண்டியிருக்கிறது.
தியாகி இமானுவேல் சேகரனின் நினைவுநாள் நிகழ்ச்சி என்பது, ஏதோ ஒரு தனிநபரின் ஞாபகர்த்த சடங்கல்ல; தலித் விரோதத்திற்கு எதிரான குறியீடு. இன்னும் நெருக்கிச் சொன்னால், முத்துராமலிங்கத்திற்கு எதிரான அணிவகுப்பு.

இந்த அணிவகுப்பை தடுத்து நிறுத்தும் நோக்கதோடுதான், காவல் துறை துப்பாக்கிச்சூட்டை நடத்தியிருக்கிறது. (அதிமுக ஆட்சியில் இருக்கும்போது இமானுவேல் சேகரனின் முதல் குரு பூஜை இது)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக