ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 19 அக்டோபர், 2011

பரமகுடி: துப்பாக்கியால் கொல்லும் (தேவர்) அரசு

தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு நாளன்று (11.09.2011) பரமக்குடியிலும், மதுரையிலும் காவல்துறைச் சாதிவெறியர்கள்

தேவேந்திர குல

மக்கள் மீது நடத்தியுள்ள வரலாறு காணாத துப்பாக்கிச்சூட்டை அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைகிறோம். துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 7

தேவேந்திர குல

மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சாவு எண்ணிக்கை அதிகரிக்கும் என அச்சம் நீடித்து வருகிறது.

ஆயிரம் பேர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதன் மூலம். ‘எவரையும் கைதுசெய்வோம்’ என்று காவல்துறை அதிகாரிகள் திட்டம் தீட்டிச் செயல்படுகிறார்கள் என்பது புலனாகிறது. காவல்துறையினர் கோபம் தீரும் வரை தென் தமிழகத் தலித் மக்கள் நிம்மதியாகக் கிராமங்களில் வாழமுடியாது என்பதும் சொல்லாமல் சொல்லப்பட்டிருக்கிறது.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட விதம் குறித்து ஆய்வு செய்யும் எவருக்கும்,

தேவேந்திர குல

மக்களின் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதல், நீண்ட காலமாகத் திட்டமிடப்பட்ட ஒரு கொலை வெறித்தாக்குதல் என்பது புலனாகும். காவல்துறை அதிகாரிகள், வலிந்து மக்களைக் கோபமுறச் செய்து, பின்னர் சட்டம் ஒழுங்கு என்ற பெயரில் துப்பாக்கிச்சூடு நடத்திப் படுகொலை செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக