ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

திங்கள், 17 அக்டோபர், 2011

மாமள்ளர் இராஜராஜ சோழனின் 1026 வது சதய விழா!!! 5 நவம்பர் 2011.



ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய தமிழகம், ஆந்திரம், கருநாடகம், கேரளம், இலங்கை, இந்தோனேசியா, சுமத்திரா, ஜாவா, பர்மா, அந்தமான் நிகோபார் லட்ச தீவுகள் ஆகிய அனைத்தையும் ஒரு குடையின் கீழ் 30 ஆண்டு காலம் திறம்பட ஆண்டவனும்,
அறுபதாயிரம் யானைப்படையும்,
ஒரு லட்சம் குதிரைப் படையும்,
ஒன்றரை லட்சம் காலாட்படையும்,
ஆகியவற்றை உள்ளடக்கிய வலிமையான இராணுவத்தை கொண்டவனும்,
இந்தியாவின் முதற் கப்பற்படை கட்டியவனும்,
கடல் கடந்து நாடுகளை வென்றவனும்,
தஞ்சை, உறையூர் மற்றும் காஞ்சி மூன்று தலைநகரையும் கொண்ட தமிழ் நாட்டை அமைத்தவனும்,
இந்தியாவின் தற்கால ஆட்சி முறைமையை அன்றே செயல்படுத்தியவனும்,
தென்னிந்தியாவின் தன்னிகரற்ற பேரரசனுமாகியவனும்,
மும்முடி சோழன் என்று அழைக்கப்பட்டவனுமாகிய
மாமள்ளர் இராஜராஜ சோழனின் 1026 வது (பிறந்தநாள்) சதய விழா 5 நவம்பர் 2011 அன்று தஞ்சையில் நடைபெற இருக்கிறது!!! இனமான மள்ளர்களே படை எடுத்து வா நம் மாமள்ளனின் நினைவை போற்றுவோம்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக