ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 11 ஜனவரி, 2012

பசுபதி பாண்டியன் உடல் அடக்கம்


தூத்துக்குடி : படுகொலை செய்யப்பட்ட பசுபதிபாண்டியன் உடல் நேற்று இரவு அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.



இரவு 8.30 மணிக்கு பசுபதி பாண்டியனின் உடல் அவரது சொந்த ஊரான அலங்காரதட்டை வந்தடைந்தது. அங்கு புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன், மள்ளர் மீட்பு கழகத்தின் சுப.அண்ணாமலை, ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கர் மற்றும் அரசியல் கட்சியினர், பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது மனைவி ஜெசிந்தா கல்லறைய¤ன் அருகே பசுபதி பாண்டியன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக