ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

ஞாயிறு, 15 ஜனவரி, 2012

பசுபதி பாண்டியன்

முடங்கி கிடந்தால் சிலந்தியும் உன்னை சிறைபிடிக்கும்... எழுந்து எழுச்சியுடன் போராடினால் எரிமலையும் உனக்கு வழி கொடுக்கும்... சமூகப்புரட்சியாளர்


பசுபதி பாண்டியன் தூத்துக்குடி மாவட்டம் மட்டுமல்ல தமிழகமே
ஒரு காலத்தில் உச்சரிக்க அஞ்சிய மாவீரனின் பெயர்... அடக்குமுறைகளுக்கு
எதிராக களம்கண்ட சமூகபோராளி தலித் சமூக மக்களின் வாழ்வாதாரம்
கேலிக்குறியதாக ஆதிக்க வெறியர்களால் ஆக்கப்பட்டபோது அஞ்சாமல் களமிறங்கிய
போராளி...

இன்றைக்கு
நம்மிடையே இல்லை... இயற்க்கை அவரை மரணிக்க செய்திருந்தால்
எம்மை போன்றோர் இப்படி கவலையும் கண்ணீரும் கடும்சினமும் கொண்டிருக்க வேண்டி வந்திருக்காது...
திட்டமிட்டு சதிபுனைந்து அந்த மாவீரன் தனித்திருந்த நேரத்தில் பேடித்தனமாக கொல்லபட்டிருக்கிறார்...
காரணமானவர்கள் இன்னும் கவலை இல்லாமல் நாட்டுக்குள் நடமாடி வருகிறார்கள். அரசின் காவல்துறை
நீதியான நடவடிக்கை எடுக்கும் என்கிற நம்பிக்கை இல்லையெனினும் சந்தர்ப்பம்கொடுத்து
காத்திருக்கிறது ஒரு சமூகம்...

அண்ணன் பசுபதி பாண்டியன் அவர்களை வீர உணர்வுடன் நினைவுகூறுகிறேன்...

1990 களின் துவக்கத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளராக
அண்ணன் பசுபதி பாண்டியன் அவர்கள் வீரியமாக களமாடி வந்தார்... அப்போது அவருடன்
நெருங்கி பழகும் வாய்ப்பு எனக்குகிடைத்தது... ஒரு முறை தலைவர் சமூகப்புரட்சியாளர்
ஷஹீத் பழனிபாபா அவர்களை சந்திப்பதற்காக பொள்ளாச்சி சென்றிருந்தேன். தலைவர் பாபா
கொல்லப்பட்ட அதே தோழர் பசவராஜ் அவர்களின் இல்லம் அது... நான் அங்கு சென்றபோது
தலைவர் பாபா அவர்கள் ஒருவருடன் உரிமையுடன் அதாவது வாடா போடா என விளித்து
உரையாடிகொண்டிருந்தார்... நானும் எனது நண்பர்களும் தலைவர் பாபா அவர்களின் அறைக்குள்
சென்றவுடன் என்னை பாபா அவர்களுடன் உரையாடிகொண்டிருந்த நபருக்கு அறிமுகம் செய்துவைத்தார்...

நான் அவர் யார் என அறியாமல் குழப்பத்தில் விழித்தேன் புரிந்துகொண்ட தலைவர் பாபா இவரை தெரிகிறதா
எனக்கேட்டார் நான் தெரியவில்லையே பாபா என்றேன்... இவர்தான் பசுபதி பாண்டியன் என தலைவர் பாபா
அவர்கள் சொன்னபோது என்னையும் அறியாமல் ஒருவிதமான நடுக்கம் என்னுள் தோன்றியது ஏனெனில்
அக்காலகட்டத்தில் ஊடகங்களில் ஒரு தீவிரவாதியாக சித்தரிக்கபட்டவர் அண்ணன் பசுபதி பாண்டியன் ஆனால்
என்னுள் தோன்றிய நடுக்கம் அண்ணன் பசுபதி அவர்கள் என்னுடன் கைகுலுக்கி உரையாட துவங்கியவுடன்
பல ஆண்டுகால நட்பாக அன்பை உருவாக்கியது... ஆம் அவ்வளவு இனிமையாக பழககூடியவர் அண்ணன்
பசுபதி பாண்டியன்...

அதன் பிறகு எனக்கும் அண்ணன் பசுபதி பாண்டியன் அவருகளுக்குமான நட்பு அன்பின் எல்லைகளை கடந்து
விரிந்தது... நான் அண்ணன் பசுபதி அவர்களுடன் உரையாடும்போதெல்லாம் சொல்வேன் அண்ணா உங்களுக்கு
பயம் என்பதே கிடையாதா...? என அதற்க்கு அவர் சொல்வார் வேங்கை அச்சம் கொண்டவனுக்கு அன்றாடம்
சாவு அச்சத்தை வென்றவனுக்கு என்றாவது ஒருநாள் சாவு இதை எனக்கு சொன்னவர் நமது தலைவர் பாபா ஆம்
நான் பாபா சொல்லியதுபோல என்றாவது ஒருநாள் சாக விரும்புகிறேன்... அதனால் எனக்கு அச்சம் என்கிற உணர்வே இல்லை...
என்பார்... ஆம் அச்சம் என்பதை அறியாத அந்த மாவீரன் இன்று கொல்லப்பட்டுவிட்டார் ஒரு வீர சாணக்கியன்
சாகடிக்கபட்டுவிட்டார்...

ஒருமுறை அண்ணன் பசுபதி பாண்டியன் அவர்கள் மதுரை வந்திருந்தபோது எதார்த்தமாக சந்திக்க முடிந்தது
அப்போது என்னுடைய அன்பிற்கும் நட்பிற்கும் உரிய தோழர் முன்னாள் வந்தவாசி தொகுதி சட்டப்பேரவை
உறுப்பினரும் தற்போதைய மக்கள் விடுதலை கட்சியின் தலைவருமான வழக்கறிஞர் க.முருகவேல் ராசன்
அவர்களை சந்திப்பதற்காக அண்ணன் பசுபதி வந்திருந்தார் அப்போது தோழர் முருகவேல்ராசன் வேங்கை வீட்டு
பிரியாணி சிறப்பாக இருக்குமென அண்ணன் பசுபதி அவர்களிடம் சொன்னார் அப்படியா வேங்கை எனக்கெல்லாம்
பிரியாணி செய்துதரமாட்டீர்களா...? என வேடிக்கையாக கேட்டார் அண்ணனுக்கு இல்லாததா இப்பவே வாருங்கள்
உடணடியாக அம்மாவிடம் சொல்லி பிரியாணி தயாரிக்க சொல்கிறேன் என்றேன் அவர் ஏதோ விளையாட்டாக
கேட்பதாக நினைத்த எனக்கு இன்ப அதிர்ச்சி உடனே வாருங்கள் உங்கள் இளையான்குடிக்கு போவோம் என புறப்பட்டுவிட்டார்

நானும் உடணடியாக என் தாயாரை தொடர்புகொண்டு விவரத்தை சொன்னேன் அழைத்துவரும்படி சொன்னார்
என் அன்பு தாயார்... மதுரையில் இருந்து அண்ணன் பசுபதி அவர்களின் வாகனத்திலேயே இளையான்குடி வந்து சேர்ந்தோம்
அன்று இரவு என் வீட்டிலேயே அண்ணன் தங்கினார் அப்போது அந்த இரவு முழுவது அண்ணன் அவர்களுடன்
உரையாடிகொண்டிருந்ததை இப்போதும் நினைத்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது... இன்றைக்கு அண்ணன் பசுபதி பாண்டியன்
அவர்கள் நம்மிடையே இல்லை என் குடும்பத்தில் ஒருவரை இழந்துவிட்டதாகவே வருந்துகிறேன்...

அண்ணன் பசுபதி பாண்டியன் அவர்களின் துணைவியார் சகோதரி ஜெசிந்தா அவர்களும் என் மீது நல்ல அன்புகொண்டவர்
சில ஆண்டுகளுக்கு முன்பாக சகோதரி ஜெசிந்தா அவர்கள் கொல்லப்பட்டதில் இருந்து அண்ணன் பசுபதி பாண்டியன்
அவர்களுடனான நட்பை சூழ்நிலைகள் காரணமாக தொடரமுடியவில்லை இனியும் தொடர முடியாது என்பதை
நினைக்கும்போது இருதயத்தை ஈட்டிமுனைகள் குத்திகிலிப்பதை உணருகிறேன்... விழிகளில் உப்புவண்டிகளின்
ஊர்வலம் வருவதை தடுக்க முனைகிறேன்...

வேங்கை.சு.செ.இப்ராஹீம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக