ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

திங்கள், 30 ஜனவரி, 2012

பசுபதிபாண்டியன் கொலை வழக்கு: மேலும் இருவர் சரண்


தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவன தலைவராக இருந்த பசுபதிபாண்டியன், கடந்த 10-ந்தேதியன்று இரவு, திண்டுக்கல்லை அடுத்த நந்தவனப்பட்டியில் உள்ள தனது வீட்டின் அருகில் படுகொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக தாடிக்கொம்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, 4 தனிப்படைகளை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர்.
கடந்த 12-ந்தேதியன்று நெல்லை மாவட்டம் இடையர்தவணையை சேர்ந்த ஆறுமுகச்சாமி, தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காட்டை சேர்ந்த அருளானந்தம் ஆகியோர் வள்ளியூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், இன்று மேட்டுப்பாளையம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ராஜபாளையம் அருகேயுள்ள மூகவூர் பூம்பழ அம்மன் கோவில் பகுதியை சேர்ந்த செல்வம் என்ற புறா மாடசாமி, மற்றும் பிரபு. இருவரும் சரணமடைந்தனர்.
இவர்களை கோவைமத்திய சிறையில் அடைக்க மேட்டுப்பாளையம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்  உத்தரவிட்டார்

தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவன தலைவராக இருந்த பசுபதிபாண்டியன், கடந்த 10-ந்தேதியன்று இரவு, திண்டுக்கல்லை அடுத்த நந்தவனப்பட்டியில் உள்ள தனது வீட்டின் அருகில் படுகொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக தாடிக்கொம்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, 4 தனிப்படைகளை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர்.
கடந்த 12-ந்தேதியன்று நெல்லை மாவட்டம் இடையர்தவணையை சேர்ந்த ஆறுமுகச்சாமி, தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காட்டை சேர்ந்த அருளானந்தம் ஆகியோர் வள்ளியூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், இன்று மேட்டுப்பாளையம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ராஜபாளையம் அருகேயுள்ள மூகவூர் பூம்பழ அம்மன் கோவில் பகுதியை சேர்ந்த செல்வம் என்ற புறா மாடசாமி, மற்றும் பிரபு. இருவரும் சரணமடைந்தனர்.
இவர்களை கோவைமத்திய சிறையில் அடைக்க மேட்டுப்பாளையம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்  உத்தரவிட்டார்


ஆளுநர் உரையில் எந்த புதிய செய்திகளுமே இல்லை: டாக்டர் கிருஷ்ணசாமி




தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் இன்று (30.01.2012) ஆளுநர் உரையுடன் தொடங்கியது.

கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் எம்எல்ஏ டாக்டர் கிருஷ்ணசாமி,

இன்று ஆளுநர் ரோசய்யா அவர்களின் உரையில், தமிழ்நாட்டில் இந்த ஆட்சி பொறுப்பேற்று 9 மாதங்கள் ஆகின்ற நிலையிலும் தொடரும் மின்வெட்டு, தானே புயலால் ஏற்பட்ட பாதிப்பு, கூடங்குளம் அணுமின் நிலையம், முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை போன்றவற்றிற்கு ஒரு தீர்வு காணக் கூடிய வகையில் எந்த புதிய செய்திகளுமே இதில் இல்லை என்றார்.

சனி, 28 ஜனவரி, 2012

கோவில்பட்டி நெல்லைக்கு 16 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு இருந்த அரசு பஸ் மீண்டும் இயக்கம்




email
கோவில்பட்டி நெல்லைக்கு 
16 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு இருந்த அரசு பஸ் மீண்டும் இயக்கம்
கடந்த 16 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு இருந்த அரசு பஸ்சை கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர். கோவில்பட்டியில் இருந்து கயத்தாறு, பன்னீர்குளம், மருதன்வாழ்வு, சீவலப்பேரி வழியாக நெல்லைக்கும், நெல்லையில் இருந்து புளியம்பட்டி, மருதன்வாழ்வு, கடம்பூர், காமநாயக்கன்பட்டி, துறையூர் வழியாக கோவில்பட்டிக்கும் இயங்கி வந்த அரசு பஸ் கடந்த 16 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு இருந்தது.
அந்த பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அந்த பஸ்நேற்று முதல் இயக்கப்பட்டது. கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் நடந்த இதன் தொடக்க விழாவுக்கு கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்கி கொடி அசைத்து பஸ்களை இயக்கி வைத்தனர்.
விழாவில் அரசு போக்குவரத்து கழக நெல்லை கோட்ட மேலாளர் கண்ணபிரான், கோவில்பட்டி கிளை மேலாளர் சங்கரநாராயணன், தூத்துக்குடி கிளை மேலாளர் கண்ணன், கோவில்பட்டி நகரசபை தலைவி ஜான்சிராணி, பஞ்சாயத்து யூனியன் தலைவி பேச்சியம்மாள், நகர அ.தி.மு.க. செயலாளர் விஜய பாண்டியன்,
ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் சங்கர பாண்டியன், மாவட்ட விவசாய அணி துணை செயலாளர் ராமச்சந்திரன், புதிய தமிழகம் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கனகராஜ், கோவில்பட்டி ஒன்றிய செயலாளர் பெரியதுரை, பலர் கலந்துகொண்டனர்.

வெள்ளி, 27 ஜனவரி, 2012

ரெண்டு ஏக்கர் நிலம்... பத்து லட்சம் பணம்!


சுபதி பாண்டியன் கொ​லைச் சதியின் மர்ம முடிச்சுகள் மெள்ள அவிழ ஆரம்பித்துள்ளன. ஆனாலும், சில சந்தேக ரேகைகள் இன்னும் விலகவில்லை! 
கடந்த ஜனவரி 10-ம் தேதி, திண்டுக்கல் - நந்தவனப்பட்டியில் அவரது வீட்டுக்கு அருகிலேயே குத்திக் கொலை செய்யப்பட்டார் பசுபதி பாண்டியன். அடுத்த இரண்டாவது நாள், திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் கோர்ட்டில், இடையர்தவணைக் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகசாமி மற்றும் தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு பகுதியைச் சேர்ந்த அருளானந்தம் ஆகியோர் சரண் அடைந்தனர்.
இவர்கள் இருவரையும் காவலில் எடுத்து விசாரித்த திண்டுக்கல் போலீஸார், அவர்களிடம் பெற்ற வாக்குமூலத்தின் பேரில் 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்து இருக்கிறார்கள். இந்த வழக்கு தொடர்பாகப் பேசிய திண்டுக்கல் எஸ்.பி ஜெயச்சந்திரன், 'சரண்டர் ஆன இரண்டு பேரிடமும் விசாரித்ததில், தூத்துக்குடி மாவட்டம் மூலக்கரை பகுதியைச் சேர்ந்த சுபாஷ் பண்ணையார்தான், பசுபதி பாண்டியனைக் கொலை செய்ய இவர்களை அனுப்பினார் என்பது தெரிய வந்தது. அவரும் கொலையாளிகளும் ஒருவருக்கொருவர் செல்​போனில் பேசியதற்கான ஆதாரங்​களும் கிடைத்து உள்ளன. கொலை செய்தவர்கள், 'எப்படிக் கொலை பண்ணினோம்' என நடித்தும் காட்டினார்கள்.
அதனால், சுபாஷ் பண்ணையாரை இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்த்து இருக்கிறோம்.அருளானந்தம், ஆறுமுகசாமி இருவருடன் சண்முகசுந்தரம் என்பவரும் கொலையில் நேரடியாகச் சம்பந்தப்பட்டு இருக்கிறார். அதுபோக, நிர்மலா என்பவர் இவர்களுக்கு நந்தவனப்பட்டியில் வீடு பார்த்துக் கொடுத்திருக்கிறார். இதுபோன்று மறைமுகமாக சம்பந்தப்பட்டு இருந்த ஒன்பது பேரையும் சேர்த்து 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்து இருக்கிறோம். மீதி 12 பேரையும் பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைத்து இருக்கிறோம்' என்றார்.  
தனிப்படையில் உள்ள அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, 'சரண் அடைஞ்ச ஆறுமுக​சாமியும் அருளானந்தனும் ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே திண்டுக்கல் வந்துட்டாங்க. வேற வேற இடத்துல இருந்தவங்க, 15 நாளுக்கு முன்னாடிதான் நந்தவனப்பட்டி ஏரியாவுக்குக் குடி போயிருக்காங்க. அவங்களோட விருதுநகர் மாவட்டம் முகவூர் பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரமும் சேர்ந்துக்கிட்டார். அவங்களுக்கு உதவி செய்த நிர்மலா, பசுபதிபாண்டியனோட சமூகத்தைச் சேந்தவங்க. அதனால யாருக்கும் சந்தேகம் வரலை. இவனுங்க சைக்கிளிலேயே எல்லா இடத்துக்கும் போயிட்டு வந்துட்டு இருந்திருக்காங்க. நோட்டம் பாக்க வந்தப்போ, அன்னிக்கு கரன்ட் கட்டாகி சரியா வாய்ப்பு அமைஞ்சதால், இவங்களே கொலையைப் பண்ணிட்டாங்க' என்றனர்.
கொலையாளிகள் திடீரென சரண் அடைந்தது பலரது புருவத்தை உயர வைத்துள்ளது. 'சரணடைந்த இருவரும் கொலைக்கு சம்பந்தப்பட்டவர்களே கிடையாது' என்றும் அதிரடி கிளப்புகிறார்கள் பசுபதி பாண்டியனின் ஆதரவாளர்கள். 'அருளானந்தம் மேல் ஏற்கெனவே கொலை வழக்கு, திருட்டு வழக்கு எல்லாம் இருக்கு. 2008-ம் வருஷம் குண்டர் சட்டத்துலயும் ஜெயிலுக்குப் போயிருக்கிறார். வேற ஒரு வழக்கில் சிக்கி ஜெயிலில் இருந்த அருளானந்தம், பசுபதி பாண்டியன் கொல்லப்படுறதுக்கு நாலைஞ்சு நாளைக்கு முன்புதான் ஜாமீனில் வந்து இருக்கிறார். அப்படி இருக்கும்போது ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே அவங்க எப்படி வேவு பாக்க முடியும்? கொலை நடந்த இடத்துக்குப் பக்கத்தில் ராத்திரி முழுக்க இந்த மூவரும்  இருந்ததா போலீஸ் சொல்கிறது. கள்ளிப்பட்டி வரைக்கும் ஓடி மோப்பம் பிடித்த போலீஸ் நாய், ஏன் இவங்களைக் கண்டுபிடிக்கலை?
வெங்கடேசப் பண்ணையார் குடும்பத்துக்கும் பசுபதி பாண்டியனுக்கும் பகை இருந்தது எல்லோருக்கும்
தெரிஞ்ச விஷயம். அதனால், வெங்கடேசப் பண்ணையாரோட தம்பி சுபாஷ் பண்ணையார்தான் பண்ணிருப்பார்னு எல்லாரும் சொன்னாங்க. பல தடவை பசுபதி பாண்டியனைக் கொலை செய்ய முயற்சி செஞ்சு, எல்லாமே தோல்வி அடைஞ்சதால கொலை முயற்சியையே சிலர் கைவிட்டுட்டாங்க. 'பசுபதி பாண்டியனைக் கொலை செய்ய வேற எதிரிகள் யாராவது முன்வந்தா, அவங்களுக்கு உதவி பண்ணலாம்'னு சிலர் அறிவித்ததும் உண்டு. இந்த நேரத்தில்தான் பசுபதி பாண்டியன் கொலை செய்யப்பட்டு இருக்கார்.  பண்ணையார் ஏற்பாட்டில்தான் இந்த இரண்டு பேரும் சரண் அடைஞ்சு இருக்கிறதா சொல்றாங்க.  இவர்களுக்கு ஆலங்குளம் பகுதியில் ஆளுக்கு இரண்டு ஏக்கர் நிலமும் தலா பத்து லட்சம் பணமும் கொடுத்து, கொலையை செய்ததா ஒப்புக்கச் சொல்லி இருக்காங்க. சரண்டர் ஆனவங்க சொன்னதன் அடிப்படையில், போலீஸும் வழக்கை முடிச்சுட்டாங்க. ஆனா, உண்மையான குற்றவாளிகள், அதுக்காகக் கைமாறின கோடிக்கணக்கான பணம் பத்தின விவரங்களை மறைக்கிறார்கள்'' என்கிறார்கள்.
சுபாஷ் பண்ணையார் தலைமறைவாக இருப்பதால், அவரிடம் பேச முடியவில்லை. அவருக்கு நெருக்கமான சிலரும் இந்த வழக்கு குறித்து பேச மறுத்துவிட்டார்கள். இந்தக் கொலை வழக்கில், பசுபதி பாண்டியன் ஆதரவாளர்கள் சொல்லும் கருத்துக்களையும் போலீஸார் அலட்சியப்படுத்தக் கூடாது!

பசுபதி பாண்டியன் கொலை: 2 பேர் சரண்

மேட்டுப்பாளையம்: திண்டுக்கல்லில் பசுபதி பாண்டியன் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக மேட்டுப்பாளையம் ஜூடிசியல் மாஜூஸ்திரேட் கோர்ட்டில் ராஜபாளையம் பகுதியை சேர்ந்த செல்வம் என்ற புறா மாடசாமி(33) மற்றும் பிரபு(23) இருவரும் இன்று சரணமடைந்தனர். இவர்களை கோவைமத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்

புதன், 25 ஜனவரி, 2012

பசுபதி பாண்டியன் கொலை: ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் உள்பட 2 பேர் கைது: மதுரை ஜெயிலில் அடைப்பு

பசுபதி பாண்டியன் கொலை:  ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் உள்பட 2 பேர் கைது: மதுரை ஜெயிலில் அடைப்பு
 
தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன் கடந்த 10-ந்தேதி திண்டுக்கல் அருகே உள்ள நந்தவனம்பட்டியில் படுகொலை செய்யப்பட்டார்.
 
இந்த கொலை தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் வள்ளியூர் கோர்ட்டில் ஆறுமுகச்சாமி, அருளானந்தன் ஆகிய 2 பேர் சரணடைந்தனர். அவர்களை போலீசார் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர்.  
 
போலீஸ் விசாரணையில் பசுபதி பாண்டியன் கொலையில் 10-க்கும் மேற்பட்டோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர வேட்டையில் இறங்கினர்.
 
இந்த நிலையில் பசுபதி பாண்டியன் கொலைக்கு உடந்தையாக இருந்த நிர்மலா மற்றும் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் முத்துப்பாண்டி (வயது27) ஆகிய 2 பேர் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர்.
 
முத்துப்பாண்டியன் திண்டுக்கல் அருகே உள்ள கரட்டழகன்பட்டியை சேர்ந்தவர். தற்போது திண்டுக்கல் ஊராட்சி மன்றக்குழு உறுப்பினராக உள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியில் மாவட்ட தலைவராக இருந்த அவர் அக்கட்சியில் இருந்து விலகி ஜான்பாண்டியன் கட்சியில் உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வந்தார்.
 
பசுபதி பாண்டியனுடன் நெருக்கமாக பழகி வந்த முத்துப்பாண்டி, நிர்மலாவுடன் சேர்ந்து இந்த கொலைக்கு திட்டம் வகுத்து கொடுத்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.  
 
முத்துப்பாண்டி, நிர்மலா ஆகிய 2 பேரையும் இன்று காலை 6 மணி அளவில் திண்டுக்கல் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு லதா முன்பு ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு லதா உத்தரவிட்டார்.
 
இதை தொடர்ந்து அவர்கள் 2 பேரும் மதுரை ஜெயிலுக்கு கொண்டு வரப்பட்டு அடைக்கப்பட்டனர்.

முத்துப்பாண்டி த.ம.மு.க., வை சேர்ந்தவர் அல்ல.....நெல்லையப்பன்

திருநெல்வேலி:""பசுபதிபாண்டியன் கொலையில் கைதான திண்டுக்கல் ஒன்றிய கவுன்சிலர் முத்துப்பாண்டி, எங்கள் கட்சியை சேர்ந்தவர் இல்லை,'' என தமிழக மக்கள் முன்னேற்ற கழக அமைப்பு செயலாளர் நெல்லையப்பன் தெரிவித்துள்ளார்.ஜான்பாண்டியன் தலைமையில் இயங்கும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் அமைப்புசெயலாளரான நெல்லையப்பன் கூறியதாவது: முத்துப்பாண்டி, முன்பு ஜான்பாண்டியன் தலைமையில் இயங்கி, தேவேந்திர குல வேளாளர் சங்கத்தில் இருந்தார். பின்னர் அவர் பகுஜன் சமாஜ் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட தலைவராக செயல்பட்டார். ஜான்பாண்டியன், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தை துவக்கிய பிறகு முத்துப்பாண்டி நெல்லைக்கு வந்ததில்லை. எனவே அவருக்கும் எங்கள் கட்சிக்கும் சம்பந்தமில்லை. அவர் எந்த பொறுப்பிலும் இல்லை, என்றார்.

கல்வி வேலைவாய்ப்பில் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் ஜான் பாண்டியன்

அனைத்துச் சாதிகளுக்கும் மக்கள் தொகை விகிதாச்சாரத்தில் கல்வி வேலைவாய்ப்பில் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்தார்.

அனைத்துச் சமுதாயத் தலைவர்களின் கலந்தாய்வுக் கூட்டம் சென்னைத் தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாசு தலைமை தாங்கினார்.
இதில் யாதவர் மகாசபை தேவநாதன், வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு, தேவேந்திரகுல வேளாளர் சங்கத் தலைவர் ஜான் பாண்டியன், நாடார் பேரவைத் தலைவர் தர்மராஜ், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் கோ.க.மணி, முன்னாள் நடுவண் அமைச்சர் அ.கி.மூர்த்தி உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தத் தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்றும் முல்லைப் பெரியாறு நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என்பன உட்பட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் பேசிய இராமதாஸ் மதுவை ஒழிப்பதற்கு அனைவரும் சேர்ந்து போராடினால்தான் முடியும். சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தி மக்கள் தொகை விகிதாச்சாரப்படி அனைத்துச் சாதியினருக்கும் கல்வி வேலைவாய்ப்பில் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்

வெடித்த துப்பாக்கிகள்... தொலைந்த உயிர்கள்

 

 
 
 
தமிழகத்தையே குலுக்கி போட்டுவிட்டது அந்தச் சம்பவம். கடந்த ஞாயிற்றுக்கிழமை ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தலித் மக்களுக்கும் காவல்துறைக்கும் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறி தென்மாவட்ட மக்களிடையே ஒருவித அச்சுறுத்தலை ஏற்படுத்தி விட்டது. ஆறு பேர் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் இறந் திருக்கிறார்கள்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தலித் தலைவரான இமானுவேல் சேகரனின் நினைவு தினம் ஆண்டுதோறும் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அந்நாளை கடந்த சில ஆண்டுகளாக வீரவணக்க நாளாக குருபூஜை செய்து வழிபட்டுவருகின்றனர் தலித் மக்கள். அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் இதில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திவருகின்றனர். 54வது நினைவு நாளான கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்நிகழ்ச்சி அமைதியுடன்தான் தொடங்கியது. ஆனால் காலை 11.30 மணிக்கு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் அஞ்சலி செலுத்த வருவதற்கு தடைவிதித்து போலீசார் அவரை தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் கைது செய்ததாக வந்த தகவல் 6 உயிர்களை பலிவாங்கிய பிறகே ஓய்ந்தது.

இச்சம்பவத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன் ராமநாதபுரம் அருகே பச்சேரியில் பிளஸ் 1 படிக்கும் தலித் மாணவர் பழனிக்குமார் கொலை செய்யப்பட்டதால் மாவட்டத்தில் ஏற்கெனவே பதற்றமான சூழல் நிலவி வந்தது. 144 தடை உத்தரவும் போடப் பட்டது. இதனால் ஜான் பாண்டியன் வந்தால் சட்டம் ஒழுங்குச் சீர்குலையும் என போலீசார் கருதியதாகக் கூறப்படுகிறது. முதலில் சாலை மறியல் செய்த தமமுக தொண்டர்களை போலீசார் கலைந்துபோகச் சொல்லி பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அது பலனளிக்காமல் போக போலீசார் தடியடி நடத்த கலவரம் துப்பாக்கிச் சூடு வரை சென்றது. இதில் டி.ஐ.ஜி., எஸ்.பி. உட்பட ஏராளமான போலீசாரும், தலித் மக்களில் பலரும் பலத்த காயமடைந்தனர். இந்தக் கலவரம் இதோடு நின்றுவிடவில்லை. அஞ்சலி செலுத்த மதுரையிலிருந்து வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்த அங்கும் பதற்றமான சூழல் உருவாகி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு பலரும் காயமடைந்தனர். பேருந்துகள், காவல்துறை வாகனங்கள் தீக்கிரையாகின. தென்மாவட்டங்களில் பல ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை.

இதுகுறித்து தசஇயிடம் பேசிய தியாகி இமானுவேல் பேரவையின் மாநிலப் பொதுச் செயலாளர் சந்திரபோஸ், “கடந்த 1988 இல் இருந்து நான் இந்த நிகழ்வை நடத்துகிறேன். சாதிரீதியான ஒடுக்குமுறையில் படுகொலை செய்யப்பட்ட இமானுவேல் சேகரன் தேவேந்திர குல சமூகத்தின் அடையாளம். அந்த அடையாளம் மறையக்கூடாது என்பதற்காகத் தான் அவரது நினைவு நாளில் இந்த நிகழ்வு அனுசரிக்கப்படுகிறது. முதலில் நான் மட்டுமே செய்து வந்தேன். பிறகு மற்ற பகுதி தாழ்த்தப்பட்ட மக்களும் இங்கு வந்து அனுசரிக்க ஆரம்பித்தனர். அதுவே இன்று பல லட்சம் மக்கள் வருகிற நிகழ்வாக மாறியிருக்கிறது. கடந்த திமுக ஆட்சியில் அமைச்சர் சுப.தங்கவேலன், தொகுதி எம்.பி. ரித்திஷ் உட்பட பலரும், அதிமுக சார்பில் நயினார் நாகேந்திரன் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும் வந்து மாலை அணிவித்து மரியாதை செய்துள்ளனர்.

செப்.11ம் தேதி காலையில் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மரியாதை செலுத்தி விட்டுச் சென்றுள்ளார். அதிமுக ஆட்சிக்கு வந்தால் இமானுவேல் சேகரனார் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிப்போம் என்று சொல்லித்தான் வாக்கு சேகரித்தனர். ஆனால் தமிழக அரசு நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க எந்த விதியும் இல்லை  என்று  சொல்லி விட்டது. எங்கே முத்துராமலிங்கத் தேவர் குருபூஜைக்கு இணையாக இவர்கள் வளர்ந்து விடுவார்களோ எனப் பயந்து சிலர் அரசியல் அதிகாரம் மூலம் இந்தக் கலவரத்தை ஏற்படுத்திவிட்டனர். ஜான் பாண்டியனை ஏன் போலீஸ் கைது செய்கிறது? அவர் விழாவிற்கு வந்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என உளவுத்துறை மூலம் அறிக்கை வந்ததாகவும் அதனால் அவர் வருகையை தடுத்த தாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர். இப்போது 6 உயிர்கள் பலியானது மட்டும் சட்டம் ஒழுங்குச் சீர்குலைவு இல்லையா? இந்தக் கலவரத்தை காவல்துறையினரே திட்டமிட்டுச் செய்துள்ளனர். காவல் துறையின் வாகனங்கள் அனைத்தும் அவர்கள் பக்கம் இருக்கும்போது எப்படி அதை கொளுத்தியிருக்க முடியும்?
இந்தக் கலவரம் ஒரு தரப்பிற்கும் அரசுக்கும் இடையே நடந்த வன்முறை. இந்த குருபூஜை மூலம் மக்கள் சக்தியைத் திரட்டிக் காண்பித்தால் அரசு விழா எடுக்கவேண்டிய நிலை வரும். எனவே இதனை ஒடுக்க அதி காரத்தில் உள்ள சிலரே கலவரத்தை ஏற்படுத்தி அடுத்த ஆண்டு இந்த நிகழ்விற்கு அனுமதி கொடுக்கக்கூடாது என்பதே திட்டம். அதனை காவல்துறையினர் கனகச்சிதமாகச் செய்துவிட்டனர்” என குற்றஞ்சாட்டினார். மத்திய அரசு இமானுவேல் சேகரனாருக்கு கடந்தாண்டு தபால் தலை வெளியிட்டுள்ளது என்பதும் குறிப்பிடவேண்டிய தகவல்.

தொடர்ந்து இதுகுறித்து தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன் அன்று காலை நடந்த சம்பவத்தை நம்மிடம் விவரித்தார். “நான் 11 ஆம் தேதி காலை தூத்துக் குடியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு திருநெல்வேலியில் மற்றொரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுகொண்டிருந் தேன். அங்கிருந்து பரமக்குடி செல்வதாக திட்டம். என்னுடன் இரு மாவட்ட தொண்டர்களும் வருவதாக இருந்தனர். அங்கு மாலை 3 மணியி¢ல் இருந்து 5 மணி வரை  அஞ்சலி செலுத்த காவல்துறையினர் எனக்கு நேரம் ஒதுக்கியிருந்தனர். ஆனால் இதற்கிடையே திருநெல்வேலி செல்லும் வழியிலேயே பிளஸ் 1 மாணவன் இறந்த சம்பவத்திற்காக 144 தடை உத்தரவு அங்கே போடப் பட்டுள்ளது. அதனால் நீங்கள் செல்ல வேண்டாம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஏற்கெனவே அந்தப் பையன் இறந்த இரு தினங்களுக்கு முன்பே நீங்கள் வரவேண்டாம்; சட்டம் ஒழுங்குச் சீர்குலையும் என காவல் துறையினர் கேட்டுக்கொண்டதால் சரி என்று கேட்டு நான் அங்கு செல்ல வில்லை. எனது கட்சிக்காரர்களை வைத்தே அந்தப் பள்ளி மாணவனின்  அடக்கத் தைச் செய்துவிட்டேன். அதனால் இதற்கும் நான் இமானுவேல்சேகரன் நினைவு தினத்தில் கலந்துகொள்வதற் கும் சம்பந்தமே இல்லை. இது பரமக்குடியில் நடக்கிறது. அது கமுதி அருகே மண்டபமாணிக்க பச்சேரி என்ற கிராமம்.

எனவே காவல்துறையினர் திட்டமிட்டே என்னை கைது செய்தனர். அதோடு முதல்வருக்கும் தவறான தகவலை அளித்து சட்டமன்றத்தில் அந்தப் பையனை காரணம் காட்டி சட்டம் ஒழுங்குச் சீர்குலையும் என்பதால் தான் இந்த நடவடிக்கை என்றும் தெரிவிக்கச் செய்துள்ளனர். என்னை வீட்டுக் காவலில் வைத்திருந்தால்கூட இந்தப் பிரச்னை எழுந்திருக்காது. வல்லநாடு துப்பாக்கிச் சூடு பயிற்சி இடத்தில் வைத்ததால் என்னைச் சுட்டுவிட்டனர் என்ற தகவலும் பரவியிருக்கிறது” என்றவர், “தவறு செய்த அதிகாரிகளை அரசு உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும்’’ என்றார். 
இந்த செப்டம்பர் 11 அன்று  அமெரிக்கத் தாக்குதலின் பத்தாம் ஆண்டு நிகழ்வு. இந்த தினம் தமிழகத் தில் வெடித்த கலவரத்தின் மூலமாக தென்மாவட்டத்தில் மிகவும் மறக்க முடியாத தினமாக மாறிவிட்டது.  இது தொடர்கதை ஆகாமல் சம்பந்தப்பட்ட வர்கள் பார்த்துக் கொள்ளவேண்டியது அவசியம்.




மிக மோசமான மனித உரிமை மீறல் இது

ஹென்றி டிபேன்,
மக்கள் கண்காணிப்பகம்


பரமக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவம் மிக மோசமான மனித உரிமை மீறலாகும். மக்களின் மீது ஆயுதப் பிரயோகத்தைச் செய் வதற்கு போலீசார் பின்பற்ற வேண்டிய எந்தச் சட்ட நடைமுறை களும் இந்த தாக்குதலில் பின்பற்றப் படவில்லை. வழக்கறிஞர்கள் மற்றும் மனித உரிமைச் செயலாளி கள் அடங்கிய எங்கள் குழுவினர் பல்வேறு கிராமங்களுக்குச் சென்று பாதிக்கப்பட்ட தலித் மக்களின் கண்ணீரை தொடர்ந்து கேட்டு வருகின்றனர். இந்த துப்பாக்கிச் சூடு நடவடிக்கையில் சென்னையிலிருந்து பலரின் பங்கு இருந்ததாக எங்கள் உண்மை அறியும் குழுவுக்கு தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் அரசுப் பணியிலும் வெளியிலும் இருப்பவர்கள். மூத்த காவல்துறை அதிகாரிகளும் வேறு சில அதிகாரிகளும் மேலிடத்திலிருந்து வந்த உத்தரவு என்று பேசும்போது குறிப்பிட்டுள்ளனர்.

செப்டம்பர் 9ம் தேதி கொல்லப் பட்ட தலித் இளைஞன் கொலைக்கு முதலமைச்சர் ஜெயலலிதா சில காரணங்களைக் கூறியுள்ளார். பச்சேரி கிராமத்திற்கு அருகில் முத்துராமலிங்கபுரம் கிராமத்தில் உள்ள சுவரில் முத்துராமலிங்கத் தேவர் குறித்து எழுதியதால் அந்த தலித் இளைஞன் கொல்லப் பட்டதாக அவர் கூறியுள்ளார். இந்த கிராமத்தின் தெருக்களில் தலித்துகள் இன்னும் செருப்பு போட்டுக்கூட நடக்கமுடியாது என்பதே உண்மையான நிலை. ஆனால், உளவுப் பிரிவினர் கொடுத்திருக்கும் தவறான தகவல்கள்தான் முதலமைச்சரின் அறிக்கையில் பிரதிபலிக்கிறது.
பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட ஆறு நபர்களுக்கும் உடனடியாக தமிழக அரசு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு அளிக்கவேண்டும். முதலமைச்சர் ஜெயலலிதா, ஆறு தலித் உயிர்களின் இழப்புக்காக தார்மீக பொறுப்பேற்றுக்கொண்டு தலித் சமூகத்திடம் மன்னிப்புக் கோர வேண்டும். இது இந்தச் சம்பவத்தின் மூலம் இரு சமூகத்தினருக்கிடையே தொடரப்போகும் பதற்றங்களைக் குறைத்து மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்புவதற்கு வழிவகுக்கும். அரசுக்கு வெளியே உள்ள நபர்கள் தலையீடு காவல்துறையில் இனி இருக்காது என்றும் முதலமைச்சர், தமிழக மக்களுக்கு உறுதி அளிக்கவேண்டும்.

ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரால் அமைக்கப்படும் நீதி விசாரணை எதுவானாலும் அது ஏற்கெனவே போலீசாரிடம் இருக்கும் ஆவணங்களின் அடிப்படையிலேயே நடக்கும். அவை ஏற்கெனவே திருத்தி மாற்றப்பட்டுள்ளன. இதற்கு முன்பு தாமிரபரணி நதி அருகில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டையும்  நீதிபதி மோகன் விசாரணை ஆணையத்தையும் மறந்து விடக்கூடாது.  தெற்குப் பிராந்திய ஐ.ஜி.க்கு சென்னையிலிருந்து இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்த உத்தரவு அளித்தது யார் என்பதையும் ஏன் மாவட்ட ஆட்சியரையும் மீறி இந்த விஷயம் நடைபெற்றது என்பதையும் புலனாய்வு செய்து கண்டுபிடிக்க வேண்டியது அவசியம். இந்த விசாரணை சரியாக நடத்த தேசிய மனித உரிமை கமிஷன்தான் தகுந்த அமைப்பாகும். அதனால் தமிழ்நாடு அரசு இந்த விசாரணை யை ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியிடம் தராமல் தானாக முன்வந்து தேசிய மனித உரிமை ஆணையத்திடம் இந்த வழக்கை ஒப்படைக்கவேண்டும்.

பட்டியல் சாதியினருக்கான தேசிய ஆணையம் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த விசாரணை உடனடியாக தொடங்கவேண்டும்.

ரூ. 2 கோடி கூலி...பசுபதி பாண்டியனைத் தீர்த்துக் கட்ட!



Pasupathi Pandian

திண்டுக்கல்: தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியனைத் தீர்த்துக் கட்ட ரூ. 2 கோடி கூலி கொடுக்கப்பட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

திண்டுக்கல் நந்தவனப்பட்டியில் ஜனவரி 10ம்தேதி 3 பேர் கொண்ட கும்பலால் பசுபதி பாண்டியன் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக இதுவரை அருளானந்தன், ஆறுமுகசாமி ஆகியோர் கோர்ட்டில் சரணடைந்து பின்னர் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டனர். மேலும் கொலையாளிகளுக்கு வீடு பிடித்துக் கொடுத்து உதவிய நிர்மலா மற்றும் அவரது கூட்டாளி முத்துப்பாண்டி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கொலையைத் தூண்டி கொலையாளிகளை ஏவி விட்ட சுபாஷ் பண்ணையார் உள்ளிட்டோர் தலைமறைவாக உள்ளனர்.

இந்த நிலையில் நிர்மலா, முத்துப்பாண்டி ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல முக்கியத் தகவல்கள் கிடைத்துள்ளன.

கடந்த ஓராண்டாகவே பசுபதி பாண்டியனை கொலை செய்ய நிர்மலா, முத்துப்பாண்டியன் ஆகியோருடன் சுபாஷ் பண்ணையார் திட்டம் தீட்டியுள்ளார். இதில் நிர்மலா, முத்துப்பாண்டிக்கு தலா ரூ. 1 கோடி தரப்பட்டுள்ளது. இந்த பணத்தில்தான் நிர்மலா, 3 ஷேர் ஆட்டோ, 3 பிளாட், 2 சொகுசு கார் வாங்கியுள்ளார்.

பசுபதி பாண்டியன் கொலையான அன்று இரவு போலீசார் அவரது உடலை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சென்ற நிர்மலா, ஐயாவே போயிட்டார், இனி எங்களை காப்பாத்த யார் இருக்கா? என கூப்பாடு போட்டுக் கதறி அழுதார்.

மேலும் தீக்குளிக்கப் போவதாக கூறி கேனில் கொண்டு வந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றுவது போல நாடகமாடியுள்ளார். அருகில் இருந்தவர்கள் மண்ணெண்ணெய் கேனை பறித்துள்ளனர். தன் மீது சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு கட்டமாக நிர்மலா நாடகமாடியுள்ளார்.

கடந்த ஆண்டு நிலப்பிரச்னையில் முத்துபாண்டியன் கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளார். அப்போது, எதிர்தரப்பினருக்கு ஆதரவாக பசுபதி பாண்டியன் பஞ்சாயத்து பேசியுள்ளார். அந்த நேரத்தில் முத்துபாண்டியனை தூக்கிச் சென்று பசுபதி பாண்டியன் ஆதரவாளர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதனால் அவர் மீது கோபத்தில் இருந்துள்ளார் முத்துப்பாண்டி. இதை அறிந்த சுபாஷ் பண்ணையார், முத்துப்பாண்டி தரப்பை வளைத்துள்ளார். அதன் பிறகுதான் நிர்மலாவை, சுபாஷ் பண்ணையார் தரப்பினருக்கு கவுன்சிலர் முத்துபாண்டி அறிமுகப்படுத்தியுள்ளார். இதன்மூலம் பசுபதி பாண்டியனை கொலை செய்து முத்துபாண்டி பழி தீர்த்து கொண்டார்.

கடந்த 11ம் தேதி பசுபதி பாண்டியன் உடல் தூத்துக்குடிக்கு கொண்டு செல்லப்பட்டது. அன்று திண்டுக்கலில் நடந்த இறுதி ஊர்வலத்தில் முத்துப்பாண்டியும் பங்கேற்றுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

சுபாஷ் பண்ணையார் உள்ளிட்டோரைப் பிடிக்க தனிப்படைகள் கேரளா மற்றும் மும்பை விரைந்துள்ளன. விரைவில் அவர்களும் சிக்குவார்கள் என்று தெரிகிறது.

பசுபதிபாண்டியன் கொலை‌யி‌ல் பெ‌ண் உ‌ள்பட 2 பே‌ர் கைது (பட‌ங்க‌ள்)


Webdunia
WD
தேவேந்திரகுவேளாளரகூட்டமைப்பினநிறுவனததலைவர் பசுபதி பாண்டியனகொலவழக்‌கி‌லபெணஉள்பட 2 பேரகாவ‌ல்துறை‌யின‌ரகைதசெ‌ய்து‌ள்ளன‌ர். மேலு‌ம் 8 பேரகாவ‌ல்துறை‌யின‌ரதேடி வரு‌கி‌ன்றன‌ர்.

திண்டுக்கலபுறந்கரபகுதியாநந்தவனபட்டியிலவசித்தவந்த பசுபதிபாண்டியன் கடந்த 10ஆமதேதி தனதவீட்டினஅருகஅமர்ந்திருந்போதஒரகும்பலாலவெட்டிககொலசெய்யப்பட்டார்.

இததொடர்பாகடந்த 12ஆமதேதி ஆறுமுகச்சாமி, அருளானந்தமஆகியோரவள்ளியூரநீதிமன்றத்திலஆஜரானார்கள். இவர்களகடந்த 19ஆமதேதி காவ‌ல்துறை‌யின‌ரதனதகாவலிலஎடுத்தவிசாரணநடத்தினர்.

WD
இதனைததொடர்ந்தஎதிரிகளுக்கநந்தவனப்பட்டியிலவீடபிடித்துககொடுத்தஇந்கொலைக்கஉதவியாஇருந்தவரஇப்பகுதியைசசேர்ந்காவ‌‌ல‌ரி‌னசகோதரி நிர்மலஎன்பததெரிவந்தது. அவரிடம் காவ‌ல்துறை‌யின‌ரவிசாரணமேற்கொண்போதஜான்பாண்டியனகட்சியாதமிழமக்களமுன்னேற்றககழகத்தினதிண்டுக்கலமாவட்டததலைவரும், கரட்டழகன்பட்டி வெள்ளோடபகுதி ஊராட்சி ஒன்றிஉறுப்பினருமாு.முத்துப்பாண்டி இந்கொலையிலதொடர்பஉள்ளததெரிவந்தது.

கரட்டழகன்பட்டியைசசேர்ந்முனியாண்டியினமகனாமுத்துப்பாண்டி (37) ஏற்கனவபசுபதி பாண்டியனுடனஇருந்தவர். பின்னரமாயாவதியினபகுஜனசமாஜகட்சியினதிண்டுக்கலமாவட்டததலைவராகவுமபின்னரஅதிலிருந்தவிலகி தமிழமக்களமுன்னேற்றககழகத்தினமாவட்டத்தலைவராகவுமஇருந்தவருகிறார்.

இந்நிலையிலநந்தவனப்பட்டி தலிதஇனத்தைசசேர்ந்நிர்மலாவஇதஇனத்தைசசேர்ந்முத்துப்பாண்டி சுபாஷ்பண்ணையாருக்கஅறிமுகமசெய்தவைத்துள்ளார். பசுபதி பாண்டியனஇல்லாமலபோனாலஅந்இடத்திற்கமுத்துப்பாண்டி வரலாமசுபாஷபண்ணையாரகூறியதாநிர்மலகாவ‌ல்துறவிசாரணையிலகூறியுள்ளாராம்.

இதனைததொடர்ந்தஇந்வழக்கின் 5வதஎதிரியாநிர்மலாவும், 6வதஎதிரியாமுத்துப்பாண்டியுமசேர்க்கப்பட்டுள்ளனர். மேலுமவழக்கதொடர்பாக 8 பேரை காவ‌ல்துறை‌யின‌ரதேடி வருகின்றனர்.

பசுபதி பாண்டியன் கொலை வழக்கு சதி கும்பலுக்கு ரூ.2 கோடி கூலி



திண்டுக்கல் : பசுபதி பாண்டியனை கொலை செய்ய கும்பலுக்கு ரூ.2 கோடி வழங்கப்பட்டது தெரியவந்துள்ளது. தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதி பாண்டியன் கடந்த 10ம் தேதி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சரணடைந்த அருளானந்தம், ஆறுமுகச்சாமி ஆகியோரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். இதில், சுபாஷ் பண்ணையாரின் தூண்டுதலின்பேரில் பசுபதி பாண்டி யனை கொலை செய்ததாக தெரிவித்தனர். இதையடுத்து, சுபாஷ் பண்ணையாரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த கொலைக்கு மூளையாக இருந்து சதி செய்த நந்தவனம்பட்டியை சேர்ந்த சீலப்பாடி ஊராட்சி உறுப்பினர் நிர்மலா, திண்டுக்கல் யூனியன் கவுன்சிலர் முத்துப்பாண்டி ஆகியோரை போலீசார் கைது செய்து திண்டுக்கல் ஜே.எம்.2 மாஜிஸ்திரேட் லதா வீட்டில்  நேற்று ஆஜர்படுத்தினர். அவர்கள் இருவரையும் பிப்ரவரி 7ம் தேதி வரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து நிர்மலா திருச்சி மத்திய சிறையிலும், முத்துப்பாண்டி மதுரை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

போலீஸ் விசாரணையில், இக்கொலைக்கு மூளையாக இருந்து செயல்பட்ட நிர்மலா, சதி திட்டத்தில் ஈடுபட்டது எப்படி என்பது குறித்த பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: கடந்த ஓராண்டாகவே பசுபதி பாண்டியனை கொலை செய்ய நிர்மலா, முத்துப்பாண்டியன் ஆகியோருடன் சுபாஷ் பண்ணையார் திட்டம் தீட்டியுள்ளார். இதில் நிர்மலா, முத்துப்பாண்டிக்கு தலா ஸீ1 கோடி தரப்பட்டுள்ளது. இந்த பணத்தில்தான் நிர்மலா, 3 ஷேர் ஆட்டோ, 3 பிளாட், 2 சொகுசு கார் வாங்கியுள்ளார்.

தீக்குளிப்பு நாடகம்: பசுபதி பாண்டியன் கொலையான அன்று இரவு போலீசார் அவரது உடலை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சென்ற நிர்மலா, “ஐயாவே போயிட்டார், இனி எங்களை காப்பாத்த யார் இருக்கா?‘ என கதறி அழுதார். தீக்குளிக்கப் போவதாக கூறி கேனில் கொண்டு வந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றுவது போல நாடகமாடியுள்ளார். அருகில் இருந்தவர்கள் மண்ணெண்ணெய் கேனை பறித்துள்ளனர். தன் மீது சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு கட்டமாக நிர்மலா நாடகமாடியது போலீஸ் விசாரணை யில் தெரியவந்துள்ளது.

முத்துப்பாண்டி சிக்கியது எப்படி?: கடந்த ஆண்டு நிலப்பிரச்னையில் முத்துபாண்டியன் கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளார். அப்போது, எதிர்தரப்பினருக்கு ஆதரவாக பசுபதி பாண்டியன் பஞ்சாயத்து பேசியுள்ளார். அந்த நேரத்தில் முத்துபாண்டியனை தூக்கிச் சென்று பசுபதி பாண்டியன் ஆதரவாளர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதனால் அவர் மீது கோபத்தில் இருந்த முத்துபாண்டியை, சுபாஷ்பண்ணையார் தரப்பினர் சந்தித்துள்ளனர். அதன்பிறகு தான் நிர்மலாவை, சுபாஷ் பண்ணையார் தரப்பினருக்கு கவுன்சிலர் முத்துபாண்டி அறிமுகப்படுத்தியுள்ளார். இதன்மூலம் பசுபதி பாண்டியனை கொலை செய்து முத்துபாண்டி பழி தீர்த்து கொண்டார்.

வாடகை காரில் வேவு

கடந்த 11ம் தேதி பசுபதி பாண்டியன் உடல் தூத்துக்குடிக்கு கொண்டு செல்லப்பட்டது. அன்று திண்டுக்கலில் நடந்த இறுதி ஊர்வலத்தில் முத்துப்பாண்டி பங்கேற்றுள்ளார். மேலும், தனது காரை பயன்படுத்தாமல், வாடகைக்கு கார் பிடித்து ஆதரவாளர்களை அழைத்துக்கொண்டு தூத்துக்குடி சென்றார். அங்கு என்ன நடக்கிறது? என்பதை முத்துப்பாண்டி வேவு பார்த்துள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் இருவர் கைது


பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் பெண் உட்பட இருவர் கைது - பரபரப்பு தகவல்
1/1

திண்டுக்கல், ஜன.25 - திண்டுக்கல்லில் பசுபதி பாண்டியன் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒன்றிய செயலாளர் மற்றும் பெண் ஆகிய இருவரை நேற்றுக்காலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தேவேந்திர குல வேளாளர் நிறுவனத் தலைவர் பசுபதி பாண்டியன் திண்டுக்கல் நந்தவனப்பட்டியில் உள்ள அவரது வீட்டில் கடந்த ஜனவரி 10ம் தேதியன்று இரவு படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக நெல்லை மாவட்டம் வள்ளியூர் கோர்ட்டில் அருளானந்தம், ஆறுமுகசாமி ஆகிய இருவரும் சரணடைந்தனர். அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்திய போது 14 பேர் கொண்ட கும்பல் இச்சதித் திட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இக்கொலை வழக்கில் சுபாஷ் பண்ணையார் முதல் குற்றவாளியாகவும், அருளானந்தம், ஆறுமுகசாமி மற்றும் ராஜபாளையத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரம் உட்பட 14 பேர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். சரணடைந்த இருவரைத் தவிர தலைமறைவாக உள்ளவர்களை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் திண்டுக்கல் நந்தநவனப்பட்டியைச் சேர்ந்த பெருமாள் மனைவி நிர்மலாதேவி(45) என்பவர் கொலையாளிகளுக்கு உளவு சொல்வதிலும், அவர்கள் தங்குவதற்கு வீடும் பிடித்து கொடுத்தது தெரியவரவே அவரை நேற்றுமுன்தினம் இரவு கைது செய்தனர். அவரிடம் துருவி துருவி விசாரணை நடத்தியதில் இக்கொலை வழக்கில் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய உறுப்பினரான கரட்டழகன்பட்டியைச் சேர்ந்த முத்துப்பாண்டி(27) என்பவரும் இக்கொலைக்கு உடந்தையாக இருந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. அவரையும் நேற்றுமுன்தினம் இரவு கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நிர்மலா மற்றும் முத்துப்பாண்டியை நேற்றுக்காலை சுமார் 6 மணியளவில் மாஜிஸ்திரேட் லதா முன்புறம் போலீசார் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாள் சிறைக்காவலில் அடைக்க அவர் உத்தரவிட்டதின் பேரில் இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற முத்துப்பாண்டி

பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் கரட்டழகன்பட்டியைச் சேர்ந்த ஊராட்சி மன்ற உறுப்பினர் முத்துப்பாண்டியை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்டத் தலைவராக இருந்தார். பின்னர் அதிலிருந்து விலகி ஜான் பாண்டியன் கட்சியில் இணைந்தார். இவர் மீது அடிதடி, பஸ் எரிப்பு, மற்றும் ஒரு கொலை வழக்கு உள்ளது. பசுபதி பாண்டியனுக்கு நெருக்கமாக முத்துப்பாண்டி இருந்து வந்ததால் அவரை இக்கொலை திட்டத்திற்கு நிர்மலாதேவி பயன்படுத்திக் கொண்டார். கொலை செய்யப்பட்ட பின்னர் பசுபதிபாண்டியன் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது இறுதி யாத்திரையில் முத்துப்பாண்டியனும் மிகுந்த கவலையோடு சொந்த ஊருக்கு சென்று அடக்கம் செய்து விட்டு திரும்பி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 22 ஜனவரி, 2012

நடிகர் சரத்குமாரின் சுரண்டை வீட்டில் குண்டு வைக்கப் போவதாக மிரட்டல் கடிதம்

Sarathkumar

தென்காசி: நடிகரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் எம்எல்ஏவுக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இதுகுறித்து தென்காசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்காசி நகராட்சி தலைவர் பானுசமீமுக்கு கடந்த 18ம் தேதி ஒரு கடிதம் வந்தது. அதில் தென்காசி எம்எல்ஏ சரத்குமாரின் சுரண்டை வீட்டுக்கு வெடிகுண்டு வைக்கப்போவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே அதிர்ச்சியைடந்த பானு சமீம் கடிதத்தை எம்எல்ஏ அலுவலக மேலாளர் கருப்பையாவிடம் கொடுத்தார்.

இதுகுறித்து அவர் சென்னையில் உள்ள சரத்குமாருக்கு தகவல் தெரிவித்தார். மிரட்டல் கடிதத்தை உடனடியாக போலீசில் ஒப்படைக்கும்படி சரத்குமார் கூறியதை அடுத்து கடிதம் தென்காசி டிஎஸ்பி பாண்டியராஜிடம் கொடுக்கப்பட்டு புகாரும் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துமாறு டிஎஸ்பி தென்காசி போலீசாருக்கு உத்தரவிட்டார். எனவே சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கினார்.

பசுபதி பாண்டியனைக் கொல்ல உத்தரவிட்டது சுபாஷ் பண்ணையார்- எஸ்.பி.

Pasupathi Pandian
திண்டுக்கல்: தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்புத் தலைவர் பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் துப்பு துலங்கி விட்டது. தூத்துக்குடி மாவட்டம் மூலக்கரையைச் சேர்ந்த சுபாஷ் பண்ணையார்தான் இந்த கொலையைத் தூண்டி கூலிப்படையை ஏவி விட்டவர் என்று திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார். மொத்தம் 14 பேர் கொண்ட கும்பல் இந்த கொலைச் சதியில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.

தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதி பாண்டியன், திண்டுக்கலில் கடந்த 10ம் தேதி கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஆறுமுகச்சாமி, அருளானந்தன் ஆகியோர் வள்ளியூர் கோர்ட்டில் சரணடைந்தனர்.

அவர்களை திண்டுக்கல் போலீஸார் காவலில் எடுத்து விசாரித்தனர். இதில் கொலைக்கான காரணம், செய்தது யார், ஏவியது யார் என்பது தெரிய வந்துள்ளதாக எஸ்.பி.ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எஸ்.பி. ஜெயச்சந்திரன் கூறுகையில், பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் சரணடைந்துள்ள இருவரிடமும் தீவிர விசாரணை நடைபெற்றது.

இதில் துப்பு துலங்கியது. மூலக்கரையைச் சேர்ந்த சுபாஷ் பண்ணையாரின் தூண்டுதலின் பேரில்தான் இந்தக் கொலை நடந்துள்ளது. மொத்தம் 14 பேர் இதில் தொடர்பு கொண்டுள்ளனர். அவர்களில் அருளானந்தன் மற்றும் ஆறுமுகசாமி மட்டும் சிக்கியுள்ளனர். எஞ்சியவர்களையும் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பசுபதி பாண்டியனை கொலை செய்துவிட்டு, கொலையாளிகள் மூவரும் அவ்வழியாக வந்த லாரியை மறித்து, அதில் ஏறி கரூருக்கு தப்பிச் சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து பிரிந்து சென்றுள்ளனர்.

கொலை நடந்த நந்தவனப்பட்டியில் கொலையாளிகள் தங்க நிர்மலா என்பவர் வீடு கொடுத்து உதவியுள்ளார் என்றார் ஜெயச்சந்திரன்.

யார் இந்த சுபாஷ் பண்ணையார்?

சென்னையில், மாநகர காவல்துறை ஆணையராக விஜயக்குமார் பதவியில் இருந்தபோது போலீஸாரால் என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டவர் வெங்கடேஷ் பண்ணையார். இவரது தம்பிதான் சுபாஷ் பண்ணையார்.

பண்ணையார் குடும்பத்துக்கும், பசுபதி பாண்டியனுக்கும் இடையே நீண்ட காலமாகவே பகை உள்ளது.இவர்களின் முன்பகை காரணமாக இரு தரப்பிலும் பல தலைகள் விழுந்துள்ளன.

சுபாஷ் பண்ணையாரின் தாத்தா சிவசுப்பிரமணிய நாடார், தந்தை அசுபதி ஆகியோர் பசுபதி பாண்டியன் தரப்பால் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2006ம் ஆண்டு எப்போதும்வென்றான் அருகே பசுபதி பாண்டியனின் மனைவி ஜெசிந்தா பாண்டியன் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டது தொடர்பாக எப்போதும்வென்றான் காவல்நிலையத்தில் இவர் மீது வழக்கு உள்ளது.

இது தவிர ஆறுமுகநேரி, ஆத்தூர் காவல் நிலையங்களிலும் பல்வேறு வழக்குகள் உள்ளன. சுபாஷ் பண்ணையார் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். இவர் மீது ஏராளமான கொலை வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது சரணடைந்துள்ள அருளானந்தன், சுபாஷ் பண்ணையாரின் சொந்த ஊரான மூலக்கரையை அடுத்துள்ள முள்ளக்காடை சேர்ந்தவர். அருளானந்தன் மீது தூத்துக்குடி ஆத்தூர் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு நிலுவையில் உள்ளது.

இன்னொருவரான ஆறுமுகச்சாமி, 2007ல் கேரளாவில் இருந்து ஆந்திராவுக்கு சென்ற மீன் வேனை கடத்தியது தொடர்பாக குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதானவர். 2008ம் ஆண்டு சுரண்டை அருகே குருங்காவனம் நாட்டாமை பெரியசாமியை கொலை செய்த வழக்கிலும் இவர் கைது செய்யப்பட்டார்.

மேலும், இவர் மீது பாவூர்சத்திரம், சுரண்டை காவல் நிலையங்களிலும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

சனி, 21 ஜனவரி, 2012

பசுபதி பாண்டியன் கொலை வழக்கு: சி.பி.ஐ விசாரணை தேவை: கிருஷ்ணசாமி




சென்னை, ஜன. 20: பசுபதி பாண்டியன் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.  இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியது:  2001-க்குப் பிறகு தமிழகம், குறிப்பாக தென் மாவட்டங்கள் சமூக நல்லிணக்கத்தோடு அமைதிப் பூங்காவாக இருந்தது. அதற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியனை சமூக விரோதிகள் படுகொலை செய்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை. எனவே, இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும். கடந்த 6 மாத அதிமுக ஆட்சியில் பல அதிகார மையங்கள் இருந்தன. அவர்கள் மீது முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்து வருகிறார். எனவே, இனி தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு நிலைமை சீராகும்.  கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் "தானே' புயலால் பாதிக்கப்பட்ட குடிசைவாழ் மக்களுக்கு ரூ. 20 ஆயிரம், நெல் பயிரிட்டிருந்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 15 ஆயிரம், முந்திரி, பலா, தென்னை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 1 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.  சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் எங்கள் கட்சியின் ஆதரவு யாருக்கு என்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்றார் கிருஷ்ணசாமி.

பசுபதி பாண்டியன் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் ?


புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதி பாண்டியன் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதில் உண்மையான குற்றவாளிகளை இதுவரை போலீசார் கைது செய்யவில்லை.
இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு நிலை கவலை அளிப்பதாக உள்ளது. முதல்வர் நடவடிக்கை எடுத்து சரி செய்வார் என்று நம்புகிறேன் என அவர் கூறினார்.

பசுபதி பாண்டியன் கொலை உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்



சென்னை : பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று டாக்டர் கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்துள்ளார். புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிக்கப்பட்டோருக்கு முழுமையான நிவாரணம் கிடைக்கவில்லை. வீடு இழந்தோருக்கு ரூ.2,500 தமிழக அரசு வழங்குகிறது.

அதை வைத்து வீடு கட்ட முடியாது. எனவே, அவர்களுக்கு ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும். பலா, முந்திரி தோப்பு வைத்திருந்த விவசாயிகளுக்கு ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். தென்தமிழகத்தில் 2001ம் ஆண்டுக்கு பிறகு எல்லா சமுதாய மக்களும் ஒற்றுமையாக இருந்தனர். அதை சீர்குலைக்கும் வகையில் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த படுகொலைக்கு காரணமான உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். மேலும், இந்த கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும். இவ்வாறு கிருஷ்ணசாமி கூறினார்.

வெள்ளி, 20 ஜனவரி, 2012

பரமக்குடி து‌‌ப்பா‌க்‌கி சூடு வழ‌க்கு ஜூலை‌க்கு த‌ள்‌ளிவை‌ப்பு



)
Webdunia
பரமக்குடி துப்பாக்கிசசூடவழக்கவிசாரணையை ஜூலை மாத‌த்‌து‌க்கு உச்ச நீதிமன்றம் த‌ள்‌ளிவை‌த்து‌ள்ளது.

தமிழமக்களமுன்னேற்கழகத்தினதலைவரஜானபாண்டியனமனைவி பிரிசில்லபாண்டியன் தொட‌ர்‌ந்த வழ‌‌க்‌கி‌ல், பரம‌க்குடி து‌ப்பா‌க்‌கி சூ‌ட்டி‌ல் ப‌லியானவ‌‌ர்க‌ளி‌ன் குடு‌ம்ப‌ங்களு‌க்கு ரூ.10 ல‌ட்ச‌ம் ‌நிவாரண உத‌வி வ‌ழ‌ங்க வே‌ண்டு‌ம் எ‌ன்று மனு‌வி‌ல் கூ‌றி‌யிரு‌ந்தா‌ர்.

மேலு‌ம், பரம‌க்குடி‌யி‌ல் காவ‌ல்துறை‌யின‌ர் து‌ப்பா‌‌க்‌கி சூடு நட‌த்‌தியது ‌நியாய‌ம்தானே எ‌ன்று மனு‌வி‌ல் கூ‌றியு‌ள்ள அவ‌ர், து‌ப்பா‌‌க்‌கி சூடு ம‌னித உ‌ரிமை ‌மீ‌றிய செய‌ல் எ‌ன்று‌ம் து‌ப்பா‌க்‌கி சூடு நட‌த்‌திய காவ‌ல‌ர்க‌‌ள் ‌மீது வழ‌க்கு‌ப் ப‌திவு செ‌ய்ய வே‌ண்டு‌‌ம் எ‌‌ன்று மனு‌வி‌ல் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இ‌ந்த மனு உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற ‌நீ‌திப‌தி கோதா, கோகலே ஆ‌‌கியோ‌‌ர் கொ‌ண்ட அம‌ர்வு மு‌ன்பு இ‌ன்று ‌விசாரணை‌க்கு வ‌ந்தது. அ‌ப்போது, ஆந்திராவிலநடந்துப்பாக்கிசசூடவழக்கோடசேர்த்தவிசாரி‌ப்பதாக கூ‌றிய ‌நீ‌திப‌திக‌ள், இர‌ண்டு வழக்குகளையு‌ம் ஜூலமாத‌த்து‌க்கு த‌ள்‌ளிவை‌த்தன‌ர்.

பரமக்குடி துப்பாக்கிச் சூடு : விசாரணைக் குழு அறிக்கை!


பரமக்குடி: பரமக்குடியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, நீதிபதி சம்பத் தலைமையில் தமிழக அரசு விசாரணைக் குழு அமைத்துள்ளது. இதற்கிடையே, மதுரையைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று, தனியாக விசாரணை நடத்தி பல்வேறு பரிந்துரைகளை அளித்துள்ளது. அதில், ஜான் பாண்டியனுக்கு ஆதரவாக பரமக்குடியில் மறியலில் ஈடுபட்டவர்களைக் கட்டுப்படுத்த அல்லது கலைக்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. கூட்டத்தினர் கலவரம் செய்தனர் என்ற காவல்துறையினரின் வாதம் அடிப்படை இல்லாதது. காவல்துறையினரின் வாகனம் தீ வைக்கப்பட்டது என்ற கூற்று, பொது அறிவுக்கு விரோதமானது. மேலும், காவல்துறையினரின் செயலை நியாயப்படுத்துவதற்காகவே, காவல்துறையினரின் வாகனங்கள் தீ வைக்கப்பட்டதாக பொது விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. ஜான் பாண்டியனை கைது செய்ததும், இமானுவேல் சேகரன் குருபூஜையில் அவரை கலந்துக் கொள்ள முடியாமல் தடை செய்தது தேவையற்றது மற்றும் கலவரத்தைத் தூண்டியது என்று கூறியுள்ளது. குரு பூஜைக்கு எந்த ஆயுதமும் இல்லாமல் சென்றவர்கள் மீது சுமார் 4 மணி நேரம் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியது நியாயத்திற்கு புறம்பானது என்றும் பொது விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.

ஜா‌ன் பா‌ண்டியனை கைது செ‌ய்தது தவறு- காவ‌ல்துறை ‌மீது ‌விசாரணை குழு கு‌ற்ற‌ச்சா‌ற்று

ஜானபாண்டியனகைதசெய்ததும், இமானுவேலசேகரனகுருபூஜையிலஅவரகலந்துககொள்முடியாமலதடசெய்தததேவையற்றது எ‌ன்று‌ம் இதுவே கலவரத்தைததூண்டியதஎன்று‌ம் தொ‌ண்டு ‌நிறுவன‌ம் நட‌த்‌திய விசாரணை‌‌ககுழு கூறியுள்ளது.

ராமநாதபுர‌ம் மாவ‌ட்ட‌ம், பரமக்குடியிலதுப்பாக்கிசசூடு ‌நிக‌ழ்வு தொடர்பாக, நீதிபதி சம்பததலைமையிலவிசாரணைககுழு ஒ‌ன்றை தமிழஅரசு அமைத்துள்ளது.

இத‌னிடையே, மதுரையை சேர்ந்தன்னார்தொண்டநிறுவனமஒன்று, தனியாவிசாரணநடத்தி பல்வேறபரிந்துரைகளை அரசு‌க்கு அளித்துள்ளது.

அதில், ஜானபாண்டியனுக்கஆதரவாபரமக்குடியிலமறியலிலஈடுபட்டவர்களைககட்டுப்படுத்அல்லதகலைக்காவல்துறஉரிநடவடிக்கஎடுக்கவில்லஎன்றவிசாரணைககுழதெரிவித்துள்ளது.

கூட்டத்தினரகலவரமசெய்தனரஎன்காவல்துறையினரினவாதமஅடிப்படஇல்லாதது எ‌ன்று‌‌ம் காவல்துறையினரினவாகனமவைக்கப்பட்டதஎன்கூற்று, பொதஅறிவுக்கவிரோதமானது எ‌ன்று‌ம் அ‌ந்த குழு கூ‌றியு‌ள்ளது.

காவல்துறையினரினசெயலநியாயப்படுத்துவதற்காகவே, காவல்துறையினரினவாகனங்களவைக்கப்பட்டதாபொதவிசாரணைககுழதெரிவித்துள்ளது.

ஜானபாண்டியனகைதசெய்ததும், இமானுவேலசேகரனகுருபூஜையிலஅவரகலந்துககொள்முடியாமலதடசெய்தததேவையற்றது எ‌ன்று‌ம் இதுவே கலவரத்தைததூண்டியதஎன்று‌ம் விசாரணை‌‌க் குழு கூறியுள்ளது.

குரபூஜைக்கஎந்ஆயுதமுமஇல்லாமலசென்றவர்களமீதசுமார் 4 மணி நேரம் காவ‌ல்துறை‌யின‌ர் துப்பாக்கிசசூடநடத்தியதநியாயத்திற்கு புற‌‌ம்பானது எ‌ன்று‌ம் பொது‌ ‌விசாரணை குழு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

புதன், 18 ஜனவரி, 2012

பசுபதி பாண்டியன் படுகொலை எதிரொலி



 

பசுபதி பாண்டியன் படுகொலை

பசுபதி பாண்டியன் படுகொலை சம்பவம் எதிரொலியாக, நெல்லை மாவட்டம் வல்லத்தில் அரசு பேருந்து கண்ணாடியை உடைத்து வாலிபரை அரிவாளால் வெட்டிய கும்பலை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதிபாண்டியன் செவ்வாய்கிழமை வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து பசுபதி பாண்டியனின் ஆதரவாளர்கள் வன்முறையில் இறங்கினர்.

புதன்கிழமை அதிகாலை செங்கோட்டையிலிருந்து தென்காசிக்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று வல்லம் நிறுத்தத்தில் நின்ற போது வல்லத்தை சேர்ந்த அசோக்குமார், சுரேஷ், கண்ணன், திருமலைக்குமார், சங்கர்பாபு மற்றும் சிலர் அரிவாள், கம்பு உள்ளிட்ட ஆயுதங்களுடன் சென்று அந்த பேருந்தின் கண்ணாடியை அடித்து நொறுக்கியுள்ளனர்.

வாலிபருக்கு வெட்டு

இதன் பின்னர் சிறிது நேரம் கழித்து அப்பகுதியில் வை.முத்துக்குமார், சமுதாய நாட்டாண்மை மாரியப்பன், ப.முத்துக்குமார் பேசி கொண்டிருந்தனர். அப்போது அசோக்குமார் தலைமையிலான கும்பல் அங்கு சென்று முன்விரோதம் காரணமாக ப.முத்துக்குமாரை அரிவாளால் வெட்ட முயன்றுள்ளது. இதனை கண்டு ப.முத்துக்குமார் ஓடியுள்ளார். இதனை வை. முத்துக்குமார் தடுக்க சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அசோக்குமார் அவரை அரிவாளால் வெட்டியுள்ளார். மேலும் அசோக்குமாருடன் வந்தவர்களும் முத்துக்குமாரை அடித்து உதைத்துள்ளனர். 

இதனை கண்டித்த பலவேசம் என்பவரை அக்கும்பலை சேர்ந்தவர்கள் கழிவுநீர் வாய்க்காலில் தள்ளி மிரட்டியுள்ளனர். இச்சம்பவத்தில் படுகாயமடைந்த வை.முத்துக்குமார், பலவேசம் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர்.

வெட்டியவர் கைது

இந்த இரு சம்பவங்கள் குறித்தும் செங்கோட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அரிகரகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்தார்.

இன்ஸ்பெக்டர் மாரிமுத்து விசாரணை நடத்தி சங்கர்பாபு (25) என்பவரை கைது செய்தார். மேலும் தப்பியோடிய அசோக்குமார் தலைமையிலான கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவத்தை அடுத்து வல்லம் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பசுபதி பாண்டியன் கொலைக்கு முன்னும், பின்னும் நடந்தவை என்ன?

செவ்வாய்க்கிழமை கொல்லப்பட்ட தேவேந்திரர் குல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதி பாண்டியனின் உடல், தூத்துக்குடி, கீழ அலங்காரத்தட்டு கிராமத்துக்கு, நேற்று (புதன்கிழமை) இரவு 8.30 மணிக்கு, கொண்டுவரப்பட்டது. இதுதான் அவரது சொந்த ஊர்.
அங்கு, பசுபதி பாண்டியன் உடலுக்கு, பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், குடும்பத்தினர், உறவினர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர், 9.30 மணிக்கு, அவரது மனைவி ஜெசிந்தா பாண்டியன் நினைவிடம் அருகே, அடக்கம் செய்யப்பட்டது.

பசுபதி பாண்டியன்
கடந்த 2006-ம் ஆண்டு பசுபதி பாண்டியனைக் கொல்வதற்காக தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டபோது, அவர் மயிரிழையில் உயிர் தப்பியிருந்தார். ஆனால், அந்தத் தாக்குதலில் அவரது மனைவி ஜெசிந்தா பாண்டியன் கொல்லப்பட்டார்.
.பசுபதி பாண்டியன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், இருவர் தாமாகவே முன்வந்து சரணடைந்துள்ளனர். தென்காசியை அடுத்த சுரண்டையைச் சேர்ந்த ஆறுமுகசாமி மற்றும் தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த அருளானந்தம் ஆகிய இருவரும் இன்று வள்ளியூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இவர்கள் இருவரையும் 15 நாள் போலீஸ் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இவர்கள் நிஜமாகவே பசுபதி பாண்டியன் கொலையில் தொடர்பு பட்டவர்களா, அல்லது, கணக்கு காட்ட சரணடைய வைக்கப்பட்டவர்களா என்பது புலனாய்வில்தான் தெரியவரும்.
பசுபதி பாண்டியனின் போஸ்ட்மாட்டம் ரிப்போர்ட்டின்படி அவரது உடலில், மார்பு. வயிறு, இடுப்பு, முதுகு,

நேற்று (புதன்கிழமை) தூத்துக்குடியில்..
கழுத்து ஆகிய இடங்களில் காயங்கள் உள்ளன. இந்தக் காயங்களில் கூரான ஆயுதங்களால் ஏற்படுத்தப்பட்ட காயங்களும், தடியால் அடித்த காயங்களும் உள்ளன. உடலின் ஒரே ஸ்பாட்டில் மீண்டும் மீண்டும் காயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக போஸ்ட்மாட்டம் ரிப்போர்ட் சொல்கிறது.
அதன் அர்த்தம், தாக்கியவர்கள், தடிகளாலும், கூரிய ஆயுதங்களாலும் அவரது உயிர் பிரிந்தது உறுதியாகும்வரை தொடர்ந்து தாக்கிவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.
வழமையாக அவரது ஆட்கள் 24 மணிநேரமும் அவருக்கு பாதுகாப்பு கொடுத்தபடி இருப்பார்கள். அவரது வீட்டிலும், பாதுகாப்புக்காக சிலர் நிரந்தரமாக தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
ஆனால், தாக்குதல் நடைபெற்ற நேரத்தில் பசுபதி பாண்டியன் தனிமையில் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடன் கூடிவே இருக்கும் ஆட்கள் சொந்த வேலைகளுக்காக அன்றிரவு தூத்துக்குடி சென்றிருக்கிறார்கள். ஒரேயொரு நபர் மட்டும் பசுபதி பாண்டியனுடன் இருந்திருக்கிறார். அவரை சிகரெட் வாங்கி வருமாறு பசுபதி பாண்டியன் கடைக்கு அனுப்பிய பின்னரே தனிமையில் இருந்திருக்கிறார்.
கொலையாளிகள் உபயோகித்த பொருள் என்று அவரது வீட்டுக்கு அருகேயிருந்து சைக்கிள் ஒன்றை எடுத்து வைத்திருக்கின்றனர் போலீஸார். வேறு தடயம் ஏதும் கிடைத்ததாக தகவல் இல்லை.
2006-ம் ஆண்டு தூத்துக்குடி நெடுஞ்சாலையில் பசுபதி பாண்டியன் சென்ற கார்மீது வெடிகுண்டு வீசப்பட்டது. அந்தத் தாக்குதலின்போது, மற்றொரு காரில் ஏறிச்சென்று மயிரிழையில் தப்பினாலும், மனைவியை பறிகொடுத்த பசுபதி பாண்டியன், அதன்பின் தனது பாதுகாப்பை கருத்தில் கொண்டு, தூத்துக்குடியில் இருந்து வெளியேறி, திண்டுக்கல்லுக்கு அருகேயுள்ள நந்தவனப்பட்டியில், மகன் சந்தோஷ், மகள் பிரியாவுடன் வசித்து வந்தார்.

நெல்லை அருகே வாலிபர் வெட்டிக் கொலை: பசுபதி பாண்டியன் ஆதரவாளர்கள் 4 பேர் கைது


நெல்லை: நெல்லை அருகே வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பசுபதி பாண்டியன் ஆதரவாளர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

தாழையுத்து அருகேயுள்ள ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகன் ஸ்டீபன். பைனான்ஸ் தொழி்ல் செய்து வந்தார். நேற்று காணும் பொங்கலையொட்டி ஸ்டீபனை அவரது உறவினர் ஐசக் மது விருந்துக்கு அழைத்துச் சென்றார். ஊர் விலக்கில் உள்ள சுடலைமாடன் கோயில் வளாகத்தில் மது விருந்து நடந்தது. இதில் ஐசக்,ஸ்டீபன் மற்றும் 10 பேர் மது அருந்தி விட்டு கோழிக்கறி சாப்பிட்டனர். அப்போது அவர்களுக்குள் வாய்த் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமைடந்தவர்கள் ஸ்டீபனை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து பைக்கில் தப்பி சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த நெல்லை எஸ்பி விஜயேந்திர பிதாரி விசாரணை நடத்தினார். விசாரணையில் ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த முருகன், ரூபன், ராகுலன், பாலாமடை விஜயராகவன், கணேசன், குட்டி, மணிமாறன், கீழபாட்டம் சுப்பையா, காட்டாம்புளி நிர்மல், சண்முகராஜ், ஐசக் ஆகிய 11 பேர் கொலை செய்தது தெரிய வந்தது.

இதில் சுப்பையா உள்ளிட்ட 4 பேர் போலீசில் அளித்துள்ள வாக்குமுலத்தில் பசுபதி பாண்டியன் கொலை செய்யப்பட்ட அன்று ஸ்டீபன் திண்டுக்கல் சென்றிருந்ததாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. பசுபதி பாண்டியன் கொலை சம்பவத்தில் இவரும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று நினைத்த நாங்கள் அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தோம். இதற்காக அவரது உறவினர் ஐசக்கை அணுகி ஸ்டீபனை பொங்கல் விருந்துக்கு அழைத்து வருமாறு கூறினோம்.

அதன்படி ஐசக் ஸ்டீபனை அழைத்து வந்தார். நாங்கள் அனைவரும் அமர்ந்து மது அருந்தினோம். பின்னர் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நாங்கள் ஸ்டீபனை அரிவாளால் வெட்டிக் கொன்றோம். இவ்வாறு அவர்கள் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

பசுபதி பாண்டியன் கொலையால் நெல்லை, தூத்துக்குடியில் தொடரும் பதற்றம்


நெல்லை: பசுபதி பாண்டியன் கொலை தொடர்பாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.

தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதிபாண்டியன் கடந்த 10ம் தேதி திண்டுக்கல்லில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சுரண்டை இடையர்தவணையைச் சேர்ந்த ஆறுமுகசாமி, தூத்துக்குடி முள்ளக்காடு அருளானந்தம் ஆகியோர் வள்ளியூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

வெங்கடேஷ் பண்ணையாரின் சித்தப்பா அசுவதி, தாத்தா சுவசுப்பிரமணியன் கொலைக்கு பழிக்கு பழியாக பசுபதி பாண்டியன் கொலை செய்யப்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இந்த சம்பவத்தால் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட கிராமங்களில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. நெல்லை அருகே ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த ஸ்டீபன் என்பவர் நேற்று பசுபதி பாண்டியன் ஆதரவாளர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

மானூர் அருகே கீழ தென்கலத்தில் காமராஜர் படம் பொறிக்கப்பட்ட பேனர் மற்றும் கொடிகம்பங்கள் அடித்து நொருக்கப்பட்டன. கங்கைகொண்டான் அருகே மேட்டு பிரான் சேரியைச் சேர்ந்த எட்டப்பன் என்பவருக்கு சொந்தமான வேன் தீ வைத்து எரிக்கப்பட்டது.

வல்லநாடு அருகே உள்ள பக்கப்பட்டியில் பொங்கல் விளையாட்டு போட்டியில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். பேட்டை அருகே ஒரே நாளில் 3 பஸ்கள் கல்வீசி தாக்கப்பட்டன. இச்சம்பவத்தால் கிராமப்புறங்களில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. நெல்லை, தூத்துக்குடியில் ஒரு சில கிராமங்களுக்கு செல்லும் இரவு நேர பஸ்கள் நிறுத்தப்பட்டன.

திங்கள், 16 ஜனவரி, 2012

பசுபதி பாண்டியன் படுகொலை - மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்




மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லா வெளியிடும் கண்டன அறிக்கை.
தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன் வன்முறையாளர்களால் நேற்று (11.01.2012) படுகொலை செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம்.
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்கும், நலன்களுக்கும் பாடுபட்டவர்களின் பசுபதி பாண்டியன் மிக முக்கியமானவர். அவரது மரணம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஏற்பட்ட இழப்பாகும்.
இப்படுகொலைக்கு காரணமான வன்முறையாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டு சட்டத்தின் அடிப்படையில் தண்டிக்கப்பட வேண்டும். இன மோதல்களை உருவாக்கும் இதுபோன்ற போக்குகளை அனுமதிக்கக் கூடாது.
அவரை இழந்து வாடும், அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் எமது ஆழ்ந்த ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.
வன்முறைக்கு வன்முறை தீர்வாக அமையாது, எனவே தென் தமிழக மக்கள் உணர்ச்சி வசப்படாமல் அமைதி காக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

ஞாயிறு, 15 ஜனவரி, 2012

பசுபதி பாண்டியன்

முடங்கி கிடந்தால் சிலந்தியும் உன்னை சிறைபிடிக்கும்... எழுந்து எழுச்சியுடன் போராடினால் எரிமலையும் உனக்கு வழி கொடுக்கும்... சமூகப்புரட்சியாளர்


பசுபதி பாண்டியன் தூத்துக்குடி மாவட்டம் மட்டுமல்ல தமிழகமே
ஒரு காலத்தில் உச்சரிக்க அஞ்சிய மாவீரனின் பெயர்... அடக்குமுறைகளுக்கு
எதிராக களம்கண்ட சமூகபோராளி தலித் சமூக மக்களின் வாழ்வாதாரம்
கேலிக்குறியதாக ஆதிக்க வெறியர்களால் ஆக்கப்பட்டபோது அஞ்சாமல் களமிறங்கிய
போராளி...

இன்றைக்கு
நம்மிடையே இல்லை... இயற்க்கை அவரை மரணிக்க செய்திருந்தால்
எம்மை போன்றோர் இப்படி கவலையும் கண்ணீரும் கடும்சினமும் கொண்டிருக்க வேண்டி வந்திருக்காது...
திட்டமிட்டு சதிபுனைந்து அந்த மாவீரன் தனித்திருந்த நேரத்தில் பேடித்தனமாக கொல்லபட்டிருக்கிறார்...
காரணமானவர்கள் இன்னும் கவலை இல்லாமல் நாட்டுக்குள் நடமாடி வருகிறார்கள். அரசின் காவல்துறை
நீதியான நடவடிக்கை எடுக்கும் என்கிற நம்பிக்கை இல்லையெனினும் சந்தர்ப்பம்கொடுத்து
காத்திருக்கிறது ஒரு சமூகம்...

அண்ணன் பசுபதி பாண்டியன் அவர்களை வீர உணர்வுடன் நினைவுகூறுகிறேன்...

1990 களின் துவக்கத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளராக
அண்ணன் பசுபதி பாண்டியன் அவர்கள் வீரியமாக களமாடி வந்தார்... அப்போது அவருடன்
நெருங்கி பழகும் வாய்ப்பு எனக்குகிடைத்தது... ஒரு முறை தலைவர் சமூகப்புரட்சியாளர்
ஷஹீத் பழனிபாபா அவர்களை சந்திப்பதற்காக பொள்ளாச்சி சென்றிருந்தேன். தலைவர் பாபா
கொல்லப்பட்ட அதே தோழர் பசவராஜ் அவர்களின் இல்லம் அது... நான் அங்கு சென்றபோது
தலைவர் பாபா அவர்கள் ஒருவருடன் உரிமையுடன் அதாவது வாடா போடா என விளித்து
உரையாடிகொண்டிருந்தார்... நானும் எனது நண்பர்களும் தலைவர் பாபா அவர்களின் அறைக்குள்
சென்றவுடன் என்னை பாபா அவர்களுடன் உரையாடிகொண்டிருந்த நபருக்கு அறிமுகம் செய்துவைத்தார்...

நான் அவர் யார் என அறியாமல் குழப்பத்தில் விழித்தேன் புரிந்துகொண்ட தலைவர் பாபா இவரை தெரிகிறதா
எனக்கேட்டார் நான் தெரியவில்லையே பாபா என்றேன்... இவர்தான் பசுபதி பாண்டியன் என தலைவர் பாபா
அவர்கள் சொன்னபோது என்னையும் அறியாமல் ஒருவிதமான நடுக்கம் என்னுள் தோன்றியது ஏனெனில்
அக்காலகட்டத்தில் ஊடகங்களில் ஒரு தீவிரவாதியாக சித்தரிக்கபட்டவர் அண்ணன் பசுபதி பாண்டியன் ஆனால்
என்னுள் தோன்றிய நடுக்கம் அண்ணன் பசுபதி அவர்கள் என்னுடன் கைகுலுக்கி உரையாட துவங்கியவுடன்
பல ஆண்டுகால நட்பாக அன்பை உருவாக்கியது... ஆம் அவ்வளவு இனிமையாக பழககூடியவர் அண்ணன்
பசுபதி பாண்டியன்...

அதன் பிறகு எனக்கும் அண்ணன் பசுபதி பாண்டியன் அவருகளுக்குமான நட்பு அன்பின் எல்லைகளை கடந்து
விரிந்தது... நான் அண்ணன் பசுபதி அவர்களுடன் உரையாடும்போதெல்லாம் சொல்வேன் அண்ணா உங்களுக்கு
பயம் என்பதே கிடையாதா...? என அதற்க்கு அவர் சொல்வார் வேங்கை அச்சம் கொண்டவனுக்கு அன்றாடம்
சாவு அச்சத்தை வென்றவனுக்கு என்றாவது ஒருநாள் சாவு இதை எனக்கு சொன்னவர் நமது தலைவர் பாபா ஆம்
நான் பாபா சொல்லியதுபோல என்றாவது ஒருநாள் சாக விரும்புகிறேன்... அதனால் எனக்கு அச்சம் என்கிற உணர்வே இல்லை...
என்பார்... ஆம் அச்சம் என்பதை அறியாத அந்த மாவீரன் இன்று கொல்லப்பட்டுவிட்டார் ஒரு வீர சாணக்கியன்
சாகடிக்கபட்டுவிட்டார்...

ஒருமுறை அண்ணன் பசுபதி பாண்டியன் அவர்கள் மதுரை வந்திருந்தபோது எதார்த்தமாக சந்திக்க முடிந்தது
அப்போது என்னுடைய அன்பிற்கும் நட்பிற்கும் உரிய தோழர் முன்னாள் வந்தவாசி தொகுதி சட்டப்பேரவை
உறுப்பினரும் தற்போதைய மக்கள் விடுதலை கட்சியின் தலைவருமான வழக்கறிஞர் க.முருகவேல் ராசன்
அவர்களை சந்திப்பதற்காக அண்ணன் பசுபதி வந்திருந்தார் அப்போது தோழர் முருகவேல்ராசன் வேங்கை வீட்டு
பிரியாணி சிறப்பாக இருக்குமென அண்ணன் பசுபதி அவர்களிடம் சொன்னார் அப்படியா வேங்கை எனக்கெல்லாம்
பிரியாணி செய்துதரமாட்டீர்களா...? என வேடிக்கையாக கேட்டார் அண்ணனுக்கு இல்லாததா இப்பவே வாருங்கள்
உடணடியாக அம்மாவிடம் சொல்லி பிரியாணி தயாரிக்க சொல்கிறேன் என்றேன் அவர் ஏதோ விளையாட்டாக
கேட்பதாக நினைத்த எனக்கு இன்ப அதிர்ச்சி உடனே வாருங்கள் உங்கள் இளையான்குடிக்கு போவோம் என புறப்பட்டுவிட்டார்

நானும் உடணடியாக என் தாயாரை தொடர்புகொண்டு விவரத்தை சொன்னேன் அழைத்துவரும்படி சொன்னார்
என் அன்பு தாயார்... மதுரையில் இருந்து அண்ணன் பசுபதி அவர்களின் வாகனத்திலேயே இளையான்குடி வந்து சேர்ந்தோம்
அன்று இரவு என் வீட்டிலேயே அண்ணன் தங்கினார் அப்போது அந்த இரவு முழுவது அண்ணன் அவர்களுடன்
உரையாடிகொண்டிருந்ததை இப்போதும் நினைத்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது... இன்றைக்கு அண்ணன் பசுபதி பாண்டியன்
அவர்கள் நம்மிடையே இல்லை என் குடும்பத்தில் ஒருவரை இழந்துவிட்டதாகவே வருந்துகிறேன்...

அண்ணன் பசுபதி பாண்டியன் அவர்களின் துணைவியார் சகோதரி ஜெசிந்தா அவர்களும் என் மீது நல்ல அன்புகொண்டவர்
சில ஆண்டுகளுக்கு முன்பாக சகோதரி ஜெசிந்தா அவர்கள் கொல்லப்பட்டதில் இருந்து அண்ணன் பசுபதி பாண்டியன்
அவர்களுடனான நட்பை சூழ்நிலைகள் காரணமாக தொடரமுடியவில்லை இனியும் தொடர முடியாது என்பதை
நினைக்கும்போது இருதயத்தை ஈட்டிமுனைகள் குத்திகிலிப்பதை உணருகிறேன்... விழிகளில் உப்புவண்டிகளின்
ஊர்வலம் வருவதை தடுக்க முனைகிறேன்...

வேங்கை.சு.செ.இப்ராஹீம்