ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

சங்கராபுரம் கலவரம் ....புதிய தமிழகம் சார்பில் போராட்டம் நடத்த முடிவு................டாக்டர் கிருஷ்ணசாமி M .D.M .L .A .,

''சங்கராபுரம் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யக் கோரி, புதிய
தமிழகம் கட்சியின் சார்பில் போராட்டம் நடத்தப்படும்,'' என, கட்சித்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி M .D.M .L .A ., அவர்கள் .கூறினார்.கோவையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் அருகே சேஷசமுத்திரம் கிராமத்தில் நடந்த தேர் திருவிழாவின்போது, ஆதி
திராவிடர்கள் தாக்கப்பட்டுள்ளனர். தாக்கியவர்கள் மீது, வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல்லை மாவட்டத்தில், துரை ஈஸ்வரன் கொலையில் தொடர்புடையவர்களை ஒரு வாரத்துக்குள் கைது செய்யாவிடில், புதிய தமிழகம் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும்.
'பாகுபலி' படத்தில் பகடை எனும் சமுதாயத்தினருக்கு எதிரான சில வசனங்கள் இடம் பெற்றுள்ளன. அதை நீக்க, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இன்னும், 48 மணி நேரத்துக்குள் வசனங்களை நீக்காவிடில், போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக