ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

. மள்ளர் சமுகம் மண்ணுக்கேற்ற மார்சியத்தை படைக்கும்

வரலாற்று பெருமையும், பண்பாட்டு சிறப்பும் கொண்ட மள்ளர்கள் மீது கடந்த ஒரு நூற்றாண்டாக அரிசனன்,ஆதி திராவிடன்,தாழ்த்தப் பட்டவன், தலித் என்ற இழிவுப் பெயர்களை வலியத் திணிக்கும் போக்கினை திராவிட கட்சிகளும், அதன் ஆட்சியாளர்களுமே செய்து வருகின்றனர். தற்போது எமது சமுகத்தின் முக்கியமான கோரிக்கை ' " தேவேந்திரகுல வேளாளர் அரசு ஆணை " தான் ... வெண்ணைத் திரண்டு வரும்போது தாழியை உடைப்பது போல, தேவேந்திரகுல மக்கள் தங்களது அடையாளத்தை மீட்கும் இவ்வேலையில் தீக்கதிர் போன்ற பத்திரிக்கைகள் பெயர் மாறினால் மாற்றம் வருமா ..?.. என்பது போன்ற ஆராய்சிகள் தேவையில்லை என்று கருதுகிறேன் .. அப்படி விவாதிப்பதாக இருந்தால் வாருங்கள் விவாதிப்போம் .. தீண்டாமை கொடுமைக்கு ஆளான சாணார் சமுகம் நாடார் ஆக மாறியது எப்படி ..?.... அவர்களுக்கு சமுக அங்கீகாரம், அரசியல் அங்கீகாரம் கிடைத்து இருக்கிறதே ..?..... சக்கிலியர் , மாதாரிகள் " அருந்ததியர் " ஆனதும் 3% உள் இட ஒதுக்கீடு பலனை அனுபவிப்பதும் கம்யுனிஸ்டுகளுக்கு தெரியாதா ..?.... மீண்டும் சொல்கிறேன் தோழமையோடு நீங்கள் வர்க்க ஆராய்ச்சி செய்யுங்கள் ... எங்கள் சமுக விடுதலையில் யாருடைய ஆதரவும் , எதிர்ப்பும் தேவையில்லை .... மள்ளர் சமுகம் மண்ணுக்கேற்ற மார்சியத்தை படைக்கும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக