ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

இமயம் தொலைகாட்சியில் தேவேந்திரர் இனத்தின் இமயம் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் .டாக்டர் .. க . கிருஷ்ணசாமி M .D .M .L .A ., அவர்களின் பரபரப்பு பேட்டி.....

 பட்டியல் வெளியேற்றம் இன்று எம் மக்களால் பெரிதும் விவாதிக்கப்படுகிறது ... அதை நான் வரவேற்கிறேன் .... தனி தொகுதி உ ரிமைகள் பறி போனாலும் எங்களுக்கு கவலை இல்லை ... அண்ணல் அம்பேத்கார் அவர்களின் முயற்சியில் பூனா ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டு , இரட்டை உ றுப்பினர் தொகுதிகள் நடைமுறையில் இருந்தால் எம் மக்களின் கோரிக்கைகள் எப்போதோ நிறைவேற்றப்பட்டு இருக்கும் ... காந்தியின் உ ண்ணாவிரதத்தால் இவ்வுரிமை பறிபோனது ... தற்போது நடைமுறையில் இருக்கும் தனி தொகுதிகளால் எந்த நன்மையையும் கிடையாது ... அவர்கள் அரசியல் கட்சியின் பிரதிநிதிகள், ஆதிக்க சக்திகளின் கைகூலிகள் அவ்வளவுதான் .....சாதி ஒழிய வேண்டுமானால் இந்து மதம் ஒழிய வேண்டும் .. அதன் வர்ணாசிரம தத்துவம் ஒழிய வேண்டும்... இது தற்போது நடைமுறை சாத்தியம் இல்லை .... இந்து மத தத்துவம் தனக்கு கீழ் ஒரு சாதி இருக்க வேண்டும் என்கிறது ... குறிப்பாக சாதிய படிநிலைகளை விட தாழ்த்தப்பட்ட மக்கள் மீதுதான் அனைத்து இந்துக்களின் பார்வையும் உ ள்ளது.... SC மக்கள் என்று சொல்லுவதை எம்மக்கள் விரும்பவில்லை ... பிற்பட்ட பிரிவுகள்தான் அனைவரும் .... சமுக , பொருளாதார அளவுகோல் தான் முக்கியம் ... அதில் தேவேந்திர குல சமுகத்திற்கு உ ரிய பிரதிநிதித்துவம் பெறுவோம் ... பட்டியல் சாதிகளில் 76 பிரிவுகள் உ ள்ளது .. ஒவ்வொரு சமூகமும் தனித்த வரலாறு , பண்பாடு கொண்டவை .... மற்ற பிரிவினர் சாதி மறுப்பு திருமணம் செய்கிறார்களா ..?... ஏன் பட்டியல் சமுகத்தில் மட்டும் எதிர்பார்கிறீர்கள் ..?..... மற்ற பிரிவினரும் இடஒதுக்கீட்டு உ ரிமையை அவர்களும் பெறுகின்றனர் ... ஆனால் அவர்கள் பிற்பட்ட வகுப்பினர் , நாங்கள் தாழ்த்தப்பட்ட சாதியா ..?.... இந்த அளவுகோல் மாற்றப்பட வேண்டும் ... சமூகங்களை சமூகமாக பார்க்க வேண்டும் .. சாதியாக அல்ல ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக