ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

இமயம் தொலைகாட்சியில் தேவேந்திரர் இனத்தின் இமயம் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் .டாக்டர் .. க . கிருஷ்ணசாமி M .D .M .L .A ., அவர்களின் பரபரப்பு பேட்டி.....

இமயம் தொலைகாட்சியில் தேவேந்திரர் இனத்தின் இமயம் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் .டாக்டர் .. க . கிருஷ்ணசாமி M .D .M .L .A ., அவர்களின் பரபரப்பு பேட்டி ...தேவேந்திர குல வேளாளர் என்ற எங்கள் அடையாளம் மீட்கப்பட வேண்டும் .. தமிழகத்தில் நிலத்தின் அடிப்படையில் தான் சமூகங்கள் இருந்தன .. நாங்கள் மருத நில மக்கள் ... நாயக்கர் ஆட்சியின் வருகையால் தான் மிகபெரிய பின்னடைவை தேவேந்திரர் சமுகம் சந்தித்தது ... எம் மக்களுடைய நிலங்கள் பறிக்கப்பட்டன ... நிலமற்ற விவசாய கூலிகளாக மாற்றப்பட்டனர் ... எம் மக்களின் சமுக , பண்பாட்டை சிதைக்கும் வகையில் பாளையப்பட்டுகள் உ ருவாக்கப்பட்டன..... .....................நாயக்கர்களுக்கு துணை நின்ற சமுதாயங்கள் தேவேந்திர குல மக்கள் மீது எட்டு வகையான கட்டுபாடுகள் விதிக்கப்பட்டன ... அந்த வடுகர்கள் எப்படி நாயக்கர் ஆனார்கள் ..?..... .........கள்ளர் , மறவர் , அகமுடையர் எப்படி தேவர் ஆனார்கள் ..?... தீண்டாமையால் அதிக அளவு பதிப்புக்கு உ ள்ளான சாணார் சமுகம் எப்படி நாடார் ஆனார்கள் ..?...ஆங்கிலேயர்கள் பட்டியல் இனத்தில் சாணார்களை சேர்த்தபோது லண்டன் வரை சென்று பட்டியல் மாற்றத்தை வலியுறுத்தினார்கள் , அதில் வெற்றியும் பெற்றனர் .. ஆனால் தேவேந்திர குல சமுகத்திற்கு வலிமையான தலைமை இல்லாத காரணத்தினால் எங்களின் விருப்பத்திற்க்கு மாறாக பட்டியல் இனத்தில் சேர்த்தனர் ...எல்லாரும் தங்களை ஆண்ட பரம்பரையினர் என்று கூறுகின்றனர் ... தேவேந்திரர் சமுகம் மருத நிலத்தில் ஆட்சி செய்த சமுகம் , யாரையும் அடக்கி , ஆண்டதாக வரலாறு இல்லை ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக