ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வியாழன், 13 ஆகஸ்ட், 2015

தேவேந்திரகுல வேளாளர்களின் அடையாளம் மீட்கப்பட வேண்டும்...

தேவேந்திரகுல வேளாளர்களின் அடையாளம் மீட்கப்பட வேண்டும்..... இன்று . நாங்கள் “தேவேந்திரகுல வேளாளர்” என அழைக்கப்பட வேண்டும் எனப் போராடும் மள்ளர்கள் தேவேந்திரனின் வழிவந்தவர்கள் இவர்கள் பள்ளர்கள் என அரசு ஆவணங்களில் எழுதப்பட்டு தீண்டாமைக்குரியோர் என்பது நேர்மையற்றதும் துரதிஷ்டவசமுமாகும். சங்க காலத்தில் மாண்புமிகு சமூகத்தவர்கள். மருதநிலங்களில் நெல்விளைவித்து மானுடப் பசியாற்றிய மள்ளர்கள், கொண்டாடப்பட வேண்டியவர்கள் எனச் சங்க இலக்கியங்கள் சான்றுகள் பகரும். மருதநில தெய்வமான இந்திரனின் வழிவந்த இவர்கள் இந்திரனுக்கு கொவில் கட்டி விழா எடுத்த நிகழ்வுகள் இன்றும் கடைபிடிக்கப்படுகிறது .கூர்மையான அறிவும் கருணையுள்ள இதயமும் பெற்றிருந்த இவர்களுக்கு ஊர்த் தலைமைப் பதவி இயல்பாய் வந்தாலும், குடும்ப அமைப்பை உருவாக்கியதாலும் குடும்பன் எனவும், மழை வெள்ளங்களைக் கால்வாய் கண்டு திறம்பட கையாண்டவர்களாதலால்வெள்ளாளர் எனவும் அறியப்பெற்றனர்..ஐய்யாயிரம் ஆண்டுகள் பழமையான தமிழகத்தின் நெற்பயிர் வேளாண்மைக்குச் சொந்தக்காரர்கள் என அறியப்பட்ட வரலாறும், மருதநில மண்ணின் குடிகளான மள்ளர்கள் கொண்டாடும் திருவிழாக்களும், வாழ்வியல் ஒழுங்குகளும் இன்றும் கடைபிடிப்பது இவர்களின்தேவேந்திரகுல வேளாளர் எனும் பொதுப்பெயர் வேண்டுகோளுக்கான காரணிகள்.,,, காரணங்கள் அப்படியே இருக்கிறது காரியம் எப்போது தேவேந்திரா ..?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக