ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வியாழன், 13 ஆகஸ்ட், 2015

தேவேந்திரகுல வேளாளர்களின் அடையாளம் மீட்கப்பட வேண்டும்..

தேவேந்திரகுல வேளாளர்களின் அடையாளம் மீட்கப்பட வேண்டும்..... மள்ளர்கள்தான் மண்ணின் மைந்தர்களாகவும், ஏர் உழவர்களாகவும், போர் மறவர்களாகவும் இருந்திருந்தனர். இவர்களின் தலைவன் வேந்தன்(இந்திரன்) என்று அழைக்கப்பட்டுப் பின்னர் மருதநிலத் தெய்வமானான். பழந்தமிழ் நாட்டினை 2300 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஆண்டு வந்த தமிழ் இனத்தினரான மள்ளர்களே இன்றைய பள்ளர்கள் என்பதற்க்கான இலக்கியச்சான்றுகள் மிகுதி. வட தமிழகத்தையும் ஆந்திராவையும் உள்ளடக்கிய தொண்டை மண்டலத்தை ஆண்ட பல்லவர்கள் இவர்கள் வழி வந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. இவைகளே இவர்கள் தங்களை “தேவேந்திரகுல வேளாளர்” என்று அழைத்துக் கொள்வதும் பிறராலும் அழைக்கப்படவேண்டும் எனவும் வேண்டுவதற்க்கான காரணங்கள் ... 15ஆம் நூற்றாண்டிற்குப் பின்னரே 84 பெருங்கிளைகளைக் கொண்ட மள்ளர்கள் பள்ளர்களென இழிவுபடுத்தப்பட்டிருந்தனர். வெள்ளையர் ஆட்சின்போது இவர்கள் குடும்பன்,, காலாடி..என அழைக்கப்பட்டனர்... தமிழகத்தின் தலைசிறந்த கோயில்களில் நடத்தப்பெறும் திருவிழாக்களின் போது தேவேந்திரகுல வேளாளர்களின் பங்களிப்பு சங்க காலம் தொட்டே இருந்திருக்கிறது.. இன்று வரை முதல் மரியாதை பெரும் சமூகமாக இருக்கிறது ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக