ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வியாழன், 13 ஆகஸ்ட், 2015

தேவேந்திர குல மக்கள் சாதிகளாக பிரிக்கப்படவில்லை. சாதிகளாக தொகுக்கப்பட்டிருக்கிறார்கள்.

தேவேந்திர குல மக்கள் சாதிகளாக பிரிக்கப்படவில்லை. சாதிகளாக தொகுக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த தொகுப்பு மூலமே அவர்கள் மக்கள்திரளாக ஆகி அதிகாரம் நோக்கி நகர்ந்து வந்துகொண்டிருக்கிறார்கள்... தேவேந்திர குல வேளாளர் என்ற பொது அடையாளத்தில் தற்போது அணி திரள்கிறார்கள் ..... தங்களின் சமுக உ ரிமைக்காக இட ஒதுக்கீட்டை கூட வேண்டாம் என்ற மனநிலையில் எம் மள்ளரின மக்கள் ..தமிழகத்தில் 69% இட ஒதுக்கீட்டில் பயன் அடையாத தமிழ் சமுகமே இல்லை எனலாம் .... பட்டியலின மக்களுக்கு மட்டும் தான் இட ஒதுக்கீடு பயன் கிடைப்பது போன்ற மாய தோற்றம் இங்கே உ ருவாக்கப் படுள்ளது ... பார்பன இந்து மதம் போல் இட ஒதுக்கீடு தத்துவமும் புதிய வகை வர்ணாசிரமத்தை இங்கு தோற்றுவிக்கபடுகிறது .. இங்கே எல்லா சாதிகளும் அதிகாரமும் சமூக இடமும் பெறும் வழியாக இருக்கிறது. ஆகவே சாதியை ‘ஒழிப்ப’தெல்லாம் சாத்தியமே அல்ல. கோடானுகோடி மக்களை அவர்களின் அடையாளத்தை விட்டுவிடும்படி கொள்கைப்பிரச்சாரம் செய்வதென்பது நடைமுறைச் சாத்தியமான ஒன்றல்ல. சாதிகள் தங்களைத் திரட்டிக்கொண்டு ஜனநாயக அதிகாரத்தை நோக்கிச் செல்லும் இன்றைய போட்டியை இயல்பான ஒன்றாக எடுத்துக்கொள்ளத்தான் வேண்டும்.. தமிழக அரசியல்வாதிகள் சாதியைப் பற்றிச் சொல்லும்போதே சாதிக்கு எதிராக கர்ஜனைசெய்யும் எவருமே தனிவாழ்க்கையில் சாதியை விட்டு விலகாதவர்கள். சொல்லப்போனால் ஒருவர் சாதி ஒழிக என்று கூவினாலே அவர் சாதியவாதி என்றுதான் பொருள்... சாதி அரசியலை கடைபிடிக்காத அரசியல் கட்சிகளே இங்கு இல்லை ...எனவே தேவேந்திர குல வேளாளர்களின் சமுக அடையாளமும் , அரசியல் அதிகாரமும் பெறுவதை யாரும் தடுத்து விட முடியாது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக