ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வியாழன், 13 ஆகஸ்ட், 2015

மதுரையில் தேவேந்திரகுல வேளாளர் அரசு ஆணை கோரும் மாநாடு எழுப்பும் கேள்விகள் ..?.

தேவேந்திரர் தன்னார்வ அமைப்பின் சார்பில் , RSS மாநாடு கடந்த 6ஆம் தேதி நடத்தப்பட்டது ... ஆனால் பத்திரிக்கைகளும் , தொலைக்காட்சியும் சுதேசி விழிப்புணர்வு மாநாடு என்றுதான் கூறின ...தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளையும் , இந்த சுதேசி அமைப்பும் RSS ன் பின்னணியில் இயங்கக்கூடியது ... இந்த அமைப்புகளுக்கு நிதியும் RSS தான் கொடுக்கிறது...அதன்படி நிகழ்ச்சிக்கு அமித்ஷா வருகை தந்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் பாடாமல் (ஆரம்பமே தகராறு ) ஆண்டாள் பாசுரம் பாடினார்கள்..இந்த .மாநாடுக்கு சுமார் 300 பேர் தான் தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளை தலைவர் அண்ணன் ம , தங்கராசு அவர்களால் திரட்ட முடிந்தது ... மற்றவர்கள் RSS ம் பாஜகவினரும்தான் கலந்து கொண்டனர் ... தமிழகத்தில் அய்யா இம்மனுவேல்சேகரன் புகைபடமும் , சிகப்பு , பச்சை அடையாளமும் இல்லாத மாநாடு இதுவாகத்தான் இருக்கும் .. எல்லாம் காவிமயம் ...மத்திய பிரதேசத்தில் ஒரு மாநட்டில் எவனோ ஒரு மாணவன் சமர்பித்த கட்டுரை மூலம் அதில் தேவேந்திர குல சமுதாயம் பசுவை வணங்கி, தேவேந்திரனை வழிபடுகிறார்கள் என்று அமிட்ஷா தெரிந்துகொண்டாராம் ... அதனால்தான் பசுமாடு புனிதம் , பசு மூத்திரம் புனிதம், மாட்டுக்கறி உண்ணக்கூடாது என்று கொள்கை பிரச்சாரம் செய்ய இங்கு வந்தாராம் ...தென் தமிழகத்தில் சாதி படுகொலைகள் பற்றி அவருக்கு தெரியாதா ..?...நம் நாட்டில் சாதிகள் இருக்க வேண்டுமாம். ஒவ்வொரு சாதிக்கும் ஒரு பெருமை உண்டுடாம் . அதனால்தான் கலப்பு திருமணம் வேண்டாம் என்கிறார்களாம் . எவ்வளவு பெரிய சமுக நீதி கருத்து ..?... சாதியை அதன் படிநிலையை , ஏற்ற , தாழ்வை பாதுகாப்பதுதானே இந்த பார்பன இந்து மதம் ... அவர்கள் வேறு எப்படி பேசுவார்கள் ..?..... அதனால்தான் கவனமாக தேவேந்திரர் அரசு ஆணையை மட்டும் பேசினார்கள்... . இம்மானுவேல் சேகரன் வீர வணக்க நாள் , அரசுவிழா , மதுரை விமான நிலையத்திற்கு இம்மானுவேல் சேகரன் பெயர் , தமிழக அரசியலில் தேவேந்திரர் களின் அரசியல் அதிகாரம் இதை பற்றி பேசினார்களா ..?... பேச மாட்டார்கள் ஆதிக்கசக்திகளை பகைத்துகொள்ள விரும்பமாட்டார்கள் . குருமூர்த்தி பேசுகிறார் . இந்தியாவில் சாதி அமைப்பை அழிக்க பலபேர் வந்தார்கள். புதிய சிந்தனைகளை வளர்த்தார்கள். சட்டங்கள் மூலம் சாதியை உடைக்க பார்த்தர்கள். இன்று இந்தியா உயர்ந்து நிற்கிறதென்றால் அது சாதிகளால்தான். எனவே சாதி இருக்க வேண்டும்... இது நேரடியாக அண்ணல் அம்பேத்கார் அவர்களுக்கு விடப்படும் சவால் என்பது தெரியவில்லையா ..?... சாதி அமைப்பு தகர்ந்தால் பார்ப்பானும் , பறையனும் இங்கு இருக்க முடியாதே ..?... இந்து மதம் அழிந்துவிடுமே என்ற கவலைதான் அவர்களுக்கு .. மத்திய உ ளவுதுறை மூலம் தகவல் பெற்றவர்கள் , தமிழகத்தில் தேவேந்திரர் சமுகம் புதிய தமிழகம் , மற்றும் தேவேந்திர அமைப்புகளில் தான் உ ள்ளனர் ... அவர்கள் போர் குணம் மிக்க சக்திகள் , வேறு தலைமையின் கீழ் அணிதிரள மாட்டார்கள் என்று தெரிந்து கொண்டார்கள் .. தேவேந்திர சமுகத்தை இழுக்க பா.ஜ.க. ஏற்பாடு செய்த இந்த மாநாட்டால் அனைத்து தேவேந்திர மக்களும் பா.ஜ.க. பக்கம் சாய்வார்களா? .....கடந்த இரண்டு மாதமாக பா.ஜ.கவினர் அவர்களின் கட்சிக்கு SC அணிக்கு ஆட்கள் தேடி அலைந்துக்கொண்டு இருப்பதாக தெரிகிறது ... அந்த வகையில் இந்த மாநாடு அவர்களுக்கு உ தவலாம்... மற்றபடி தேவேந்திரர் களுக்கு பட்டை நாமந்தான் .... தொடரும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக