ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வியாழன், 29 செப்டம்பர், 2011

துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து உண்ணாவிரதம் நடத்த அனுமதிக்க வேண்டும்

: பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து தேனி பகவதி அம்மன் கோயில் மைதானம் அல்லது கனரா வங்கி அருகே உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டு எஸ்.பி.யிடம் மனு அளித்தோம். ஆனால், உள்ளாட்சித் தேர்தல் விதி நடத்தையில் இருப்பதால் உண்ணாவிரதத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் எனக் கூறி அனுமதி வழங்க எஸ்.பி மறுத்துவிட்டார் என்று தேனி மாவட்ட தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகர் பாலு மகேந்திரன் ஐகோர்ட் மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். மதுரை தல்லாகுளம் தமுக்கம் மைதானம் அருகே தர்ணா போராட்டம் நடத்த அனுமதி கோரி, தல்லாகுளம் காவல்துறை உதவி ஆணையரிடம், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது. அதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு அனுமதி வழங்கக்கோரி பகுஜன் சமாஜ் கட்சி மாநிலச் செயற்குழு உறுப்பினர் குரு விஜயன் மனுத் தாக்கல் செய்திருந்தார். மதுரை அண்ணா பஸ் நிலையம் அருகே தர்ணா போராட்டம் நடத்த அனுமதி கோரி, ஆதி தமிழர் பேரவை சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த 3 மனுக்களும் நீதிபதி சுதாகர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு வக்கீல் கோவிந்தன் ஆஜராகி, “உள்ளாட்சித் தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால், ஆர்ப்பாட்டம், பேரணிக்கு அனுமதி வழங்க முடியாது. அனுமதி அளித்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டது‘ என்றார். நீதிபதி, “பேரணி நடத்தினால்தான் பிரச்னை உருவாகும், உண்ணாவிரதத்திற்கு அனுமதி வழங்கலாம். தனித்தனி இடத்தில் போராட்டம் நடத்துவதற்குப் பதிலாக ஒரே இடத்தில் நடத்தலாம். எந்த இடத்தில் அனுமதி வழங்க வேண்டும் என்பதை அரசு வக்கீல், கோர்ட்டுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்‘ எனக் கூறி விசாரணையை ஒத்திவைத்தார். ஜான்பாண்டியன் மனு விசாரணை ஒத்திவைப்பு பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான 6 பேரின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூற அனுமதி கோரி தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் ஜான் பாண்டியன் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனு நீதிபதி மாலா முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையை அக்டோபர் 12ம் தேதிக்கு ஒத்திவத்து நீதிபதி உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக