ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 27 செப்டம்பர், 2011

பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: அதிகாரிகளை "சஸ்பெண்ட்' செய்யக்கோரி மனு

சென்னை: பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, கலெக்டர் மற்றும் ஏழு போலீஸ் அதிகாரிகளை "சஸ்பெண்ட்' செய்ய உத்தரவிடக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு: ஆதி திராவிட மற்றும் சமூக அமைப்புகளுக்கு, இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தில் அஞ்சலி செலுத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. பரமக்குடியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியனை, ராமநாதபுரம் மாவட்டத்துக்குள் நுழைய விடாமல், மாவட்ட கலெக்டர் தடுத்தார் என்கிற தகவல் பரவியது. அவர், தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டார். சிலர், சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் மத்தியில் தடியடி நடத்தாமல், துப்பாக்கியால் சுட்டனர். ஜான் பாண்டியனின் அமைப்பு உள்ளிட்ட ஆதிதிராவிடர் அமைப்புகளுக்கு வழங்கப்பட்ட அனுமதியை மதிப்பதற்குப் பதில், ஆதி திராவிட மக்களுக்கு மத்தியில் கிளர்ச்சி ஏற்பட, போலீஸ் அதிகாரிகள் தான் பொறுப்பு. அஞ்சலி செலுத்த வந்த ஆதி திராவிடர்கள் மீது, துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஆறு பேர் இறந்தனர். இவர்களின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பலியான சம்பவத்துக்கு, ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் தான், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ காரணம். அவர்களை "சஸ்பெண்ட்' செய்ய வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனு, தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய, "முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மனு மீதான விசாரணை, நீதிபதிகள் தர்மாராவ், வேணுகோபால் அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்' க்கு மாற்றப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக