ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

பேச்சுவார்த்தை நடத்தி விட்டு ஏமாற்றி விட்டனர்: அதிமுக மீது டாக்டர் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

மதுரைசில் (24.09.2011) செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி,

நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தனியாக போட்டியிடும். வருகிற திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமைகளில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். தென்மாவட்டங்களில் அதிக கவனம் செலுத்துவோம்.

புதிய தமிழகம் கட்சிக்கு, கிராமப்புறங்களில் அதிக செல்வாக்கு உள்ளது. எனவே மாவட்ட ஊராட்சி, ஒன்றிய தலைவர் பதவி, கிராம ஊராட்சி தலைவர் பதவிகளில் வெற்றி பெறுவோம். நாங்கள் அ.தி.மு.க. கூட்டணியில் இருக்கிறோமா என்பதை அவர்கள் தான் தெரிவிக்க வேண்டும்.

அ.தி.மு.க. உள்ளாட்சி தேர்தலில் தனித்து தான் போட்டியிட போகிறது, கூட்டணி கிடையாது என்று எங்களிடம் ஏற்கனவே கூறியிருந்தால் நாங்கள் வேட்பாளர்களை தேர்வு செய்து இருப்போம். ஆனால் கடைசி வரை கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு ஏமாற்றி விட்டனர்.

பரமக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டிற்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை காக்கும் முயற்சியில் அரசு ஈடுபட கூடாது. பரமக்குடி சம்பவம் போல் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க, அனைத்து சமூகத்தினர் கலந்து கொள்ளும் சமூக நல்லிணக்க உண்ணாவிரதம் முதுகுளத்தூரில் நடத்தப்படும். அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

இமானுவேல் சேகரனின் பிறந்த நாளான அக்டோபர் 9ந் தேதி, பரமக்குடி சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்குவோம். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக