ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 27 செப்டம்பர், 2011

பரமக்குடி துப்பாக்கி சூடு : அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்!

சென்னை: பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில் டிஜிபி, கலெக்டர் பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை கோரி வக்கீல் புகழேந்தி, ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் எலிப்பி தர்மராவ் மற்றும் வேணுகோபால் இன்று விசாரித்தனர். மனுதாரர் சார்பாக வக்கீல் ராதாகிருஷ்ணன் ஆஜராகி, பரமக்குடி துப்பாக்கி சூட்டில் 6 பேர் இறந்துள்ளனர். இதற்கு மாவட்ட கலெக்டர், போலீஸ் ஐஜி, டிஐஜி மற்றும் எஸ்பி ஆகியோர்தான் காரணம். துப்பாக்கி சூடு நடத்தப்படும்போது முதலில் வானத்தை நோக்கிதான் சுட வேண்டும். பின் கலவரக்காரர்களின் கால்களுக்கு கீழே தான் சுட வேண்டும். இப்படி பல நிபந்தனைகள் உள்ளன. இவை அனைத்தும் மீறப்பட்டுள்ளன. எனவே துப்பாக்கி சூடு நடத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதைக் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் தமிழக டிஜிபி, கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒரு வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக