ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 25 பிப்ரவரி, 2015

புதிய தமிழகம் கட்சியினர் 4 இடங்களில் மறியல்-193 பேர் கைது..

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் புதிய தமிழகம் கட்சியின் நகர செயலாளர் படுகொலை செய்யப்பட்ட வழங்கில் கொ¬லாயளிகளை கைது செய்ய வலியுறுத்தி விருதுகர் மாவட்டத்தில் 4 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடு பட்ட புதிய தமிழகம் கட்சியினர் 193 பேர்கைது செய்யப்பட்டனர்.

வலியுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் புதிய தமிழகம் கட்சியினர் நகர செயலாளர் பாஸ்கரன் கடந்த சில தினங் களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர் பான வழக்கில் குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப் படாதை கண்டித்தும், குற்ற வாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் புதிய தமிழகம் கட்சியினர் நேற்று மறியல் செய்ய போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி விருது நகர் பழைய பஸ் நிலையம் முன்பு கிழக்கு மாவட்ட செய லாளர் ராமராஜ் தலைமையில் மறிய லில் ஈடுபட்ட ஒரு பெண் உள்பட 37 பேர் கைது செய் யப்பட்டனர். ராஜபாளையத் தில் மேற்கு மாவட்ட செயலா ளர் ராஜாலிங்கம் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 72 பேர் கைது செய்யப்பட்டனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒன்றிய செயலாளர் கண்ணன் தலை மையில் மறியல் செய்ததாக 47 பேர் கைது செய்யப்பட்ட னர். சிவகாசியில் மத்திய மாவட்ட செயலாளர் செல்லக்கனி தலைமையில் மறியல் செய்த 37 பேர் கைது செய்யப் பட் டனர். ஆக மொத்தம் மாவட் டம் முழுவதும் 4 இடங் களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண் உள்பட 193 பேர் கைது செய்யப் பட்ட னர். இந்த மறியல் போராட் டத்தை யொட்டி பலத்த போலீஸ்பாதுகாப்பு போடப் பட்டிருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக