ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 25 பிப்ரவரி, 2015

இராஜபாளையத்தில், புதிய தமிழகம் கட்சியின் நகர செயலாளர் பாஸ்கரன் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியினர் சாலை மறியல்..

vlcsnap-2015-02-25-17h26m13s211இராஜபாளையத்தில், புதிய தமிழகம் கட்சியின் நகர செயலாளர் பாஸ்கரன் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா அருகே, புதிய தமிழகம் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் இராஜலிங்கம் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் நகர செயலாளர் லட்சுமணன் என்கிற பாஸ்கரன் படுகொலையை கண்டித்தும், படுகொலை குறித்து சி.பி.ஐ.விசாரணை நடத்த வேண்டும், கொலை குற்றவாளிகளை உடனடியாக காவல்துறையினர் கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. சாலை மறியலில் ஈடுபட்ட மவாட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் குமார், நகர செயலாளர் முத்து உட்பட 74-பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் அரைமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக