ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வெள்ளி, 6 பிப்ரவரி, 2015

விருதுநகர் மாவட்டம் முழுவதும் வருகின்ற 6 ஆம் தேதியன்று கடையடைப்பு போராட்டம்..

விருதுநகர் மாவட்டம்,ஆலங்குளம் அரசு சிமென்ட் ஆலையை நவீன படுத்த தமிழக அரசு அறிவித்த 165 கோடியை உடனடியாக அமுல்படுத்த வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்களின் ஆனைக்கிணங்க விருதுநகர் மாவட்டத்தில் புதிய தமிழகம் கட்சி சார்பில் 06-02-15 அன்று மாபெரும் பொது வேலை நிறுத்தம் நடைப்பெற்றது.இந்த பொது வேலை நிறுத்தத்தில் விருதுநகர் மாவட்டத்தில் முக்கிய இடங்களில் கடையடைப்பு மற்றும் மாவட்டம் முழுவதும் சலைமறியலில் ஈடுப்பட்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட புதிய தமிழகம் கட்சி தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக