ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

தங்க நாற்கர சாலைத் திட்டத்தில் கோவையை இணைக்க வேண்டும்: டாக்டர் க.கிருஷ்ணசாமி

மத்திய அரசின் தங்க நாற்கர சாலை திட்டத்தில் கோவை,கரூர் உள்ளிட்ட மாவட்டங்களையும் இணைக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
இதுதொடர்பாக கோவையில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசியது:
போத்தனூர்-பொள்ளாச்சி அகல ரயில் பாதை திட்டத்தை விரைந்து செயல்படுத்தத் தேவையான நிதியை வரும் ரயில்வே பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும்.
மேலும், திண்டுக்கல்லிருந்து கோவை, சத்தி வழியாக மைசூர் வரைச்சாலைத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்.
அதேபோல், கோவை பல்லடம், காங்கயம், வெள்ளக்கோவில், கரூர் வழியாக திருச்சிக்கு நான்கு வழிச்சாலை அமைக்க வேண்டும்.
தென்னிந்தியாவின்  மான்செஸ்டரான கோவை மாவட்டம் மற்றும் கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை தங்க நாற்கர சாலைத்திட்டத்தில் இணைப்பதால் ஆயிரக்கணக்கான தொழிலாளர் வேலை வாய்ப்பை பெறுவார்கள்.
 இத்தகைய, கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துக்கட்சிகள், பல்வேறு அமைப்பினர், வணிகர்கள் மற்றும் பொதுமக்களையும் ஒன்று திரட்டி கோவை ரயில் நிலையம் முன்பாக வரும் மார்ச் 14-ஆம் தேதி புதிய தமிழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது என்றார்.
இதில்,  தந்தை பெரியார் திராவிடக் கழகத்தின் மாநில பொதுச்செயலர் கு.இராமகிருட்டிணன் பேசுகையில், பொள்ளாச்சி போத்தனூர் அகல ரயில் பாதை திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஆனால், அதே நேரத்திóல் பொள்ளாச்சி பாலக்காடு ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
புதிய ரயில்வே, போக்குவரத்துத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் கோவை மாவட்டம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது என்றார்.
இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் சுசிகலையரசன் மற்றும் புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக