ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 25 பிப்ரவரி, 2015

புதிய தமிழகம் கட்சி ஆர்ப்பாட்டம்..

விழுப்புரம்: புதிய தமிழகம் கட்சி பிரமுகர் படுகொலையைக் கண்டித்து, விழுப்புரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தூத்துகுடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் நகர செயலாளர் பாஸ்கர் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, விழுப்புரம் மாவட்ட புதிய தமிழகம் கட்சி சார்பில் நேற்று மாலை கலெக்டர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ரகுநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் பாரதிராஜா, நகர செயலாளர் குமரன், மாவட்ட பொருளாளர் அய்யனார் முன்னிலை வகித்தனர். இதில் புதிய தமிழகம் கட்சி பிரமுகர் பாஸ்கர் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், முக்கிய குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பினர். ஒன்றிய செயலாளர்கள் ஜெயபால், மகேஷ், ஒன்றிய தலைவர் குமார், நகர தலைவர் அன்பு, ஒன்றிய துணை செயலாளர் சாமுவேல், ஒன்றிய இளைரணி தலைவர் பிரகலாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக