ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வியாழன், 19 பிப்ரவரி, 2015

தமிழக சட்டசபையில் கிருஷ்ணசாமி வெளிநடப்பு..

சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி எழுந்து ஒரு பிரச்சினை குறித்து பேச வாய்ப்பு கேட்டார்.
ஆனால் சபாநாயகர் தனபால் அனுமதி மறுத்து கவர்னர் உரை மீது நீங்கள் பேசுகையில் பிரச்சினைகளை சொல்லலாம் என்றார். இதை ஏற்க மறுத்து டாக்டர் கிருஷ்ணசாமி அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
பின்னர் சட்டசபைக்கு வெளியே அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘பாவூர்சத்திரம் அருகே 2 பள்ளி மாணவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பேச முற்பட்டேன். நேற்றும் இன்றும் அனுமதி கிடைக்கவில்லை. கவன ஈர்ப்பு தீர்மானமும் கொடுத்து இருந்தேன். இதுபற்றி பேச வாய்ப்பு கொடுக்காததால் வெளிநடப்பு செய்தேன்’’ என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக