ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

திங்கள், 23 பிப்ரவரி, 2015

சட்டமன்றத்தில் இன்று திமுக, காங். வெளிநடப்பு: புதிய தமிழகம் வெளியேற்றம்....

சட்டமன்றத்தில் கேள்வி நேரம் முடிந்த உடன் ஒரு பிரச்சினைகுறித்து பேச அனுமதிக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கிருஷ்ணசாமி அனுமதி கேட்டு அதற்கு பேரவைத் தலைவர் அனுமதி மறுத்ததால் டாக்டர் கிருஷ்ணசாமி பேரவைத்தலைவரின் இருக் கைக்கு முன்பு வந்து தனக்குப் பேச அனுமதிக்க வேண்டும் என கீழே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
இந்நிகழ்வு பேரவை நடவடிக்கைகளுக்குக் குந்தகம் விளைவிப்பதாக பேரவைத்தலைவர் தெரிவித்ததோடு, அவரை அவையிலிருந்து வெளி யேற்றுமாறு அவைக்காவ லர்களுக்கு உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து அவைக்காவலர்கள் டாக்டர் கிருஷ்ணசாமியை அவையிலிருந்து வெளி யேற்றினார்கள்.
டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி
சட்டமன்றத்துக்கு வெளியே வந்த டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியா ளர்களிடையே தெரிவித் ததாவது:_
தென் தமிழகத்தில் எந்த வித கலவரங்களும் நடை பெறவில்லை என முதல மைச்சர் சட்டமன்றத்தில் பதிவு செய்திருக்கிறார். அவர் பதிவு செய்த அடுத்த நாளே பல இடங்களில் படுகொலைகள் நடந்துள் ளன. அதற்கான  தடுப்பு நடவடிக்கைகள் அரசால் எடுக்கப்பட வில்லை. இது குறித்து அரசின் கவனத்தை ஈர்க்க, பேச முயன்றேன். அதற்கு எனக்கு சட்டமன்றத்தில் அனுமதி வழங்கப்பட வில்லை. என்னை வெளி யேற்றியுள்ளனர் என சட்டமன்ற வளாகத்துக்கு வெளியே டாக்டர் கிருஷ் ணசாமி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக