ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வெள்ளி, 6 பிப்ரவரி, 2015

குற்றவாளிகளை கைது செய்யக்கோாி தேவேந்திரகுல மக்கள் சாலை மறியல்..

கீழப்பாவூா் ஒன்றியம் வெள்ளங்கால் கிராமத்தில் மாாிச்செல்வம் மற்றும் முருகன் இருவரும் 05.02.2015 நேற்று அடித்து கொலை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. ஆனால் இதுவரைக்கும் குற்றவாளிகள் கைது செய்யப்பட் வில்லை. இதைக்கண்டித்து சுரண்டை - பாவூா்சத்திரம் செல்லும் போக்குவரத்து சாலையில் தேவேந்திரகுல மக்கள் 300 மேற்பட்டோ் சாலை மறியல் செய்தனா்.
இச்சம்பவத்தில் கோட்டாட்சியா், தாசில்தாா் மற்றும் டிஎஸ்பி மற்றும் ஏடிஎஸ்பி அவா்களின் பேச்சுவாா்த்தைகளின் உடன்படிக்கையின்படி குற்றவாளிகள் இரண் நாட்களுக்குள் கைது செய்யப்படுவா். குற்றவாளிகள் மாற்று சமுதாயத்தினராக இருந்தால் அவா்கள் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டம் வழக்கு பதிவு செய்யப்படும். மேலும் சட்டத்திற்கு உட்பட்ட அனைத்து நடைவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதியளித்ததன்போில் சாலைமறியல் கைவிடப்பட்டது.
மேலும் புதிய தமிழகம் மேற்கு மாவட்டச்செயலாளா் திரு. ஜெயக்குமாா் அவா்கள் பேசுகையில் இன்னும் இரண்டு நாட்களுக்குள் குற்றவாளிகள் கைதுசெய்யப்பட வேண்டும். அதுவரைக்கும் மாாிச்செல்வம் மற்றும் முருகன் அவா்களின் உடல்களை வாங்கமாட்டோம் என்றும் குற்றவாளிகள் கைது செய்யவில்லை என்றால் 40க்கும் மேற்றபட்ட கிராம மக்களை ஒன்றுதிரட்டி புதிய தமிழகம் நிறுவனத் தலைவா் டாக்டா் அய்யா அவா்களின் தலைமையில் பாவூா்சத்திரம் திருநெல்வேலி நெடுஞ்சாலையில் சாலை மறியல் மற்றும் போரட்டம் நடைபெறும் என்று அறிவித்தாா்.
இந்நிகழ்ச்சியின்போது புதிய தமிகம் மேற்கு மாவட்டச் செயலாளா் திரு. ஜெயக்குமாா் நெல்லை மாநகா் மாவட்டச் செயலாளா் திரு.இராமகிருஷ்ணன் கிழக்கு மாவட்டச் செயலாளா் திரு. நடராஜன் மற்றும் கீழப்பாவூா் ஒன்றிய செயலாளா்முருகேசன் மற்றும் கடையநல்லூா் ஒன்றிய செயலாளா் மகேஷ் மற்றும் தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளா் சந்திரன் மற்றும் முன்னாள் மாவட்ட மாணவரணி ஆறுமுகச்சாமி அவா்கள் உடனிருந்தனா்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக