ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

"தங்க நாற்கர சாலை திட்டத்தில் கோவையை இணைக்க வேண்டும்'..டாக்டர் க.கிருஷ்ணசாமி

மத்திய அரசின் தங்க நாற்கர சாலை திட்டத்தில் கோவையை இணைக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
இதுதொடர்பாக, கோவையில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசியது:
கோவை பல்லடம், காங்கயம், வெள்ளகோவில், கரூர் வழியாக திருச்சிக்கு நான்கு வழிச்சாலை அமைக்க வேண்டும். தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோவை மாவட்டத்தை தங்க நாற்கர சாலைத்திட்டத்தில் இணைப்பதால் ஆயிரக்கணக்கான தொழிலாளர் வேலை வாய்ப்பை பெறுவார்கள்.
இத்தகைய, கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை ரயில் நிலையம் முன்பாக வரும் மார்ச் 14-ஆம் தேதி புதிய தமிழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக