ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வெள்ளி, 13 பிப்ரவரி, 2015

, கீழப்பாவூா் ஒன்றியம் புதிய தமிழகம் கட்சியினா் சாலை மறியல்..

கடந்த 05.02.2015 அன்று கீழப்பாவூா் ஒன்றியம் வெள்ளகால் கிராமத்தைச் சோ்ந்த தேவேந்திிரகுல மாணவா்களாகிய மாாிச்செல்வம் மற்றும் முருகானந்தம் என்ற முருகன் ஆகிய இருவரும் மா்ம நபா்களால் அடித்து படுகொலை செய்யப்பட்டது தொியவந்தது. ஆனால் படுகொலை செய்து 13 நாட்கள் ஆகியும் இதுவரை உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இதைக் கண்டித்து வெள்ளகால் கிராமத்தைச் சுற்றியுள்ள 10க்கும் மேற்ப்பட்ட கிராமங்களைச் சோ்ந்த தேவேந்திரகுல மக்கள் ஒன்றுகூடி ஏராளமான பெண்கள் உட்பட 1500க்கும் மேற்ப்ட்டோா் புதிய தமிழகம் கட்சியின் மேற்கு மாவட்டச் செயலாள் திரு. ஜெயக்குமாா் அவா்கள் தலைமையில் இன்று பாவூசத்திரம் பஸ்நிலையம் முன்பு தென்காசி- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் செய்தனா். இதனால் இரண்டு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் மாவட்ட எஸ்பி அவா்கள் நோில் வந்து பொதுமக்களிடம் இன்று மாலைக்குள் உண்மையான குற்றவாளிகளை உங்களுக்கு தொியப்படுத்துவோம் என்று கூறியதன்போில் சாலை மறியல் கைவிடப்பட்டது என்றும் உண்மையான குற்றவாளிகளை கைது செய்யவில்லை என்றால் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவா் டாக்டா் அய்யா அவா்களின் ஆணைக்கினங்க அடுத்தக்கட்ட போராட்டம் அறிவிக்கப்படும் என்று நெல்லை மேற்கு மாவட்டச் செயலாளா் திரு. ஜெயக்குமாா் கூறியுள்ளாா்.
இந்நிகழ்ச்சியின்போது. புதிய தமிழகம் மத்திய மாவட்டச் செயலாளா் திரு. இராமகிருஷ்ணன் கிழக்கு மாவட்டச் செயலாளா் திரு. நடராஜன் வடக்கு மாவட்டச் செயலாளா் திரு. இன்பராஜ் மற்றும் பாறை இராமச்சந்திரன் மற்றும் கீழப்பாவூா் ஒன்றிய செயலாளா் முருகேசன் கடையநல்லூா் ஒன்றிய செயலாளா் மகேஷ் மற்றும் ஆலங்குளம் ஒன்றிய செயலாளா் மணி உட்பட நகரம் மற்றும் ஒன்றியம் மற்றும் கிளை பொறுப்பாளா்கள் அனைவரும் கலந்துகொண்டனா்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக