ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வியாழன், 19 பிப்ரவரி, 2015

காங்கிரஸ் - புதிய தமிழகம் வெளிநடப்பு

முக்கியப் பிரச்னைகளை வலியுறுத்தி, பேரவையில் இருந்து காங்கிரஸ், புதிய தமிழகம் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் புதன்கிழமை வெளிநடப்புச் செய்தனர். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்துக்குப் பிறகு முக்கிய பிரச்னைகளை விவாதிக்க அனுமதிக்க வேண்டுமென காங்கிரஸ், புதிய தமிழகம் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
இதற்கு அனுமதி மறுத்த பேரவைத் தலைவர் ப.தனபால், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசும்போது முக்கிய பிரச்னைகளை எழுப்பலாம் என்று தெரிவித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விஜயதரணி உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்புச் செய்தனர். புதிய தமிழகம் கட்சி எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமியும் பேரவையில் இருந்து வெளியேறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக